Tag Archives: bharti airtel

மீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி

மீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி

Bharti Airtel reported a Net loss of Rs. 1,035 Crore in Q3FY20 – Quarterly Results

இந்திய தொலைத்தொடர்பு துறையில் சமீபத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நிறுவனங்களுக்கான போட்டி வெகுவாக குறைந்துள்ளது. முன்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பரவலாக இருந்த நிலையில், இன்று பல நிறுவனங்கள் காணாமல் போயின. ரிலையன்ஸ் ஜியோ(Jio) மற்றும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனங்கள் மட்டுமே பெரு நிறுவனங்களாக உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனம் தனக்கான வாடிக்கையாளர்கள் சந்தையை கொண்டிருந்தாலும், நிறுவனம் கடந்த பத்து காலாண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு கடனாக ரூ. 99,660 கோடி உள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 50,922 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

ஏர்டெல் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 21,947 கோடி எனவும், செலவினம் ரூ. 12,701 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனம் இம்முறை ரூ. 1,035 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது.

கடந்த 14 வருடங்களில் முதன்முறையாக 2019-20ம் நிதியாண்டின் மூன்று காலாண்டுகளிலும் ஏர்டெல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத்தொகையை(AGR) செலுத்துமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக ஏர்டெல் நிறுவனம் சொல்லப்பட்ட நிலுவை தொகையை ஒதுக்கியதன் மூலம் காலாண்டு முடிவில் நஷ்டத்தை சமர்ப்பித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை 40 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்திருந்தது. 2018ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் உயர்ந்திருந்தாலும், நிகர வருமானத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.83 லட்சம் கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 1.84 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதமும் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. பொதுவாக தொலைத்தொடர்பு சேவையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையார்களிடம் இருந்து பெறப்படும் சந்தா கட்டணத்தை(Subscription Fee – Recharge) கொண்டு தான் தொழிலை நிர்வகித்து வருகிறது.

ஏர்டெல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.28 லட்சம் கோடி உள்ளது. இதன் தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 4 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 80,780 கோடியாகவும், நிகர லாபம் ரூ.410 கோடியாகவும் இருந்தது. ஆனால் இம்முறை நடப்பு நிதியாண்டில் மூன்று காலாண்டுகளில் நஷ்டம் ஏற்பட்டதால், ஆண்டு முடிவில் பெரும்பாலும் நிகர நஷ்டமாகவே சொல்லப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா !

ஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா !

Alert – Q2FY20 – Bharti Airtel reports 23,000 Crore Loss in Quarterly Results

 

1984ம் ஆண்டு வாக்கில் அழுத்தக்கூடிய பட்டன் தொலைபேசிகளை அமைத்து, நாட்டில் அறிமுகப்படுத்தியவர் சுனில் மிட்டல். பின்னர் 1990ம் ஆண்டுகளில் தொலைநகல் இயந்திரங்கள்(Fax), கம்பியில்லா தொலைபேசி(Cordless Phones) என தொலைத்தொடர்பு சாதனங்களை இந்திய சந்தைக்கு வரவழைத்தார்.

 

1995ம் வருடத்தின் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் ஏர்டெல் என்னும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனம். 15 வருடங்களுக்கு முன்பு ஏர்டெல்லின் சேவையும், அதன் பின்னணி இசையுமே ஒவ்வொரு வாடிக்கையாளரை கவர்ந்திழுத்தது. அதிகமான சந்தாதாரர்களை கொண்டு நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் ஏர்டெல் நிறுவனம் விளங்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிலையன்ஸ் ஜியோ(JIO) வருகைக்கு பின் இவையனைத்தும் தலைகீழாக மாறின. அதிக கட்டணம் வசூலிக்கிறது என குறை சொல்லும் அளவிற்கு ஏர்டெல் பெயரெடுக்க, ஜியோவின் கட்டணங்கள் மலிவாகின. பேசுவதற்கும், இணைய பயன்பாட்டிற்கும் தனித்தனியாக அதிகபட்ச கட்டணங்களை செலுத்தி வந்த நிலையில், ஜியோவின் இணைய புரட்சி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் கட்டண சலுகையை அறிவிக்க வைத்தது.

 

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.86 லட்சம் கோடி. அதன் புத்தக மதிப்பு 139 ரூபாய். கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் 1.75 என்ற அளவில் அதிகமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.25 லட்சம் கோடி சொல்லப்பட்டுள்ளது.

 

நிறுவனம் கடன் அதிகமாக பெற்றாலும், அதனை செலுத்தக்கூடிய அளவில் வட்டி பாதுகாப்பு விகிதமும்(ICR) இல்லை. தற்போதைய வட்டி பாதுகாப்பு விகிதம் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 62 சதவீதமாக உள்ளது.

 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக தங்களது வாடிக்கையாளர்களின் முன்கூட்டிய செலுத்தும் கட்டணத்தை கொண்டே வளர்ச்சியை பெறும் நிலையில் உள்ளன. ஆகவே விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை தக்க வைப்பது அவசியமாகும். செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாயாக ரூ. 21,131 கோடியை பெற்றுள்ளது. 

 

கடந்த 2018ம் வருடம் செப்டம்பர் காலாண்டில் இது 20,147 கோடி ரூபாயாக இருந்தது. எனவே கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 23,045 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கொண்டுள்ளது. கடந்த 2018 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக 118 கோடி ரூபாய் உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, தற்போது லாபத்தில் 19,500 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

 

சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக செலுத்தப்பட வேண்டிய நிலுவை தொகையை, பெறப்பட்ட மொத்த வருவாயில் சரி செய்துள்ளது. இதன் காரணமாகவே செப்டம்பர் காலாண்டில் நிகர இழப்பை நிறுவனம் சந்தித்துள்ளது.

 

கடந்த பத்து வருடங்களில் தொலைத்தொடர்பு துறையில் வேகமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வீழ்ச்சி, ஏர் செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால், வோடபோன்-ஐடியா இணைப்பு, ஜியோ வருகைக்கு பின்னான ஏர்டெல் நிறுவனத்தின் பின்னடைவு மற்றும் இணைய மாற்றங்கள் என பல கட்டங்களை சந்தித்து வருகிறது.

 

தற்போது வோடபோன் நிறுவனமும் தனது சேவையை இந்தியாவில் நிறுத்தி கொள்வதற்கான நிலையில் உள்ளது. வோடபோன்-ஐடியா நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டில் 50,897 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் இது ரூ. 4,908 கோடி நஷ்டமாகவும், 2018ம்  ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 4,950 கோடியை நஷ்டமாகவும் கொண்டுள்ளது.

 

தற்போது இந்த துறையில் அரசின் கொள்கைகளும் மற்றும் விதிமுறைகளும் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே முதலீட்டாளர்கள் தொலைத்தொடர்பு துறையில் உள்ள பங்குகளில் முதலீடு செய்வதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில், இந்த துறையை தவிர்ப்பது நலம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com