நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – புத்தக அறிமுகம்
How to pick the right stock in the Share Market ? Amazon Kindle Edition – Free ebook
நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-05-2020) மாலையில் பங்குச்சந்தை அடிப்படை சார்ந்த புத்தகம் ஒன்று இணைய வழியாக வெளியிடப்பட்டது. வாசகர்கள் மற்றும் பங்குச்சந்தை ஆர்வலர்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கிணங்க, பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த கையேடாக இந்த புத்தகம் இருக்கும் என நம்பிக்கை கொள்கிறோம்.
பங்குசந்தை சார்ந்த புத்தகங்களை நீங்கள் வலைத்தளங்களில் தேடுவீர்களானால், பெரும்பாலும் அமெரிக்க பங்குச்சந்தை சார்ந்த புத்தகங்களை தான் அதிகமாக காண முடியும். இந்திய பங்குச்சந்தை பற்றி மிகக்குறைவான புத்தகங்கள் தான் இருக்கின்றன. நமது தாய்மொழி தமிழில் அதுவும் மிக குறைவு. பங்குச்சந்தை துறையில் உள்ள புத்தகங்களை அளித்த நமது முந்தைய எழுத்தாளர்களின் அறிவும், அனுபவமும் அளப்பரியது. ஆனால், அவர்கள் எழுதிய காலங்கள் மிகவும் பின்னோக்கியதாகும். நமது எழுத்தாளர் விவரிக்கும் பங்குச்சந்தையின் அடிப்படை , நிகழ்கால சந்தையுடன் ஒப்பிட முடியும். அவரின் எழுத்துக்கள் வாசகர்கள் படிப்பதையும், அவர்களின் முதலீட்டு சிந்தனையையும் தூண்டுகிறது. பங்குச்சந்தையில் அ முதல் ஃ வரை விளக்குகிறார்.
பங்குச்சந்தையில் அடிப்படை கல்வி இல்லையென்றால், முதலீடு என்பது தண்ணீரில் போட்ட உப்புக்கு சமமாகும். உதாரணமாக, மற்ற மொழிகளை நாம் கற்க வேண்டுமென்றால், அந்த மொழியின் உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து ஆகியவற்றிலிருந்து தான் தொடங்க வேண்டும்.
இவ்வுலகில் பங்குச்சந்தை மூலம் மிகப்பெரிய செல்வந்தர்களான அனைவரும் பொதுவாக அடிப்படைவாதிகளே(Fundamentals and Value Investors). மற்ற முறைகளில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. முதலீடு மற்றும் அதன் மூலம் பணத்தை பெருக்குவதற்கான அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றியவர்களில் மாபெரும் செல்வந்தரான திரு. வாரன் பப்பெட்டும்(Warren Buffet) ஒருவராவார்.
பங்குச்சந்தை வரலாறு ஆரம்பிக்கப்பட்டது சுமார் 400 வருடங்களுக்கு முன்னால்… முதன்முதலில் டச்சு நாட்டில் தான் ஒருமிக்கப்படாத பங்குச்சந்தை தோற்றம் பெற்றது. பின்னர் அது மற்ற நாடுகளுக்கு பரவியது, கடன் பத்திரங்கள் தான் முதன்முதலில் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் மாற்றமடைந்து, பொருள் சந்தை வர்த்தகம் தான் அதிகமாக நடைபெற்றது. அதாவது டிம்பர், சோயா பீன்ஸ் மற்ற பல பொருட்கள் இச்சந்தையில் வர்த்தகமானது. இவ்வாறாக சென்று கொண்டிருந்த சந்தை இன்று மிகப்பெரிய அளவில் மாற்றம் பெற்றுள்ளது.
அனைவரும் பங்குச்சந்தையில் ஈடுபட்டு முதலீட்டை மேற்கொள்ளலாம். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும், நல்ல நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் இது துணை புரியும். நல்லதொரு முதலீட்டை மேற்கொள்ள, அடிப்படை கல்வி அவசியம். அதுவே இந்த அறிமுக புத்தகத்தின் வழியாக கிடைக்கப்பெறும்.
மின்னணு புத்தகத்தை அமேசான் கிண்டில்(Amazon Kindle) பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நடப்பில் இந்த புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. படித்து பயன் பெறுங்கள்.
நீங்களும் பங்ச்சந்தை ராஜா தான் – புத்தகம்
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை