மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு புதிய செயலி (Mobile App)
New Mutual Fund Mobile App – Introduction on Varthaga Madurai Platform
இன்று வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை போல, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்பட்டு வருவதும் பரவலாக உள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கப்பெறும் சாதனங்கள் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வருபவை, எனவே அவை ஒரு முதலீட்டு சாதனமாக கருதப்படாது. அத்தியாவசிய தேவை மற்றும் அவசர பண பரிமாற்றத்திற்கு வங்கி சேமிப்பு கணக்கை பயன்படுத்தி கொள்ளலாம்.
வங்கிகளில் கிடைக்கக்கூடிய வைப்பு தொகை (Fixed Deposit) ஒரு சிறந்த முதலீடாக இருக்க முடியாது. ஏனெனில், பொதுவாக அவை பணவீக்கம் மற்றும் வரிகளை கடந்து குறைவான வட்டி வருவாயை கொண்டிருக்கும். எனவே, நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானமாக பயன் தராது.
நாட்டில் தற்போது 45க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்(Asset Management Companies) உள்ளன. பொதுவாக இவை வங்கிகளாக தான் தனது முதன்மை தொழிலை கொண்டிருக்கின்றன. மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் அனுபவம் சிறப்பானதொரு முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்திய மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 27 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்(March 2020). வங்கி சேமிப்பு கணக்குகளை போல லிக்விட் பண்டுகள்(Liquid Funds) எனும் மிக குறைந்த ரிஸ்க் கொண்ட நிதி திட்டங்கள் உள்ளன.
வங்கி டெபாசிட் தொகைக்கு மாற்றாக, கடன் பத்திர திட்டங்கள்(Debt Funds) பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்க பெறுகிறது. ஓரளவு ரிஸ்க் குறைவான பண்டுகளாக இருந்தாலும், வரி விதிப்புகளில் வங்கி டி.டி.எஸ்.(TDS) பிடித்ததை விட குறைவான வரிகள் தான் விதிக்கப்படுகின்றன. பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட், குறிப்பிட்ட துறை சார்ந்த முதலீடுகள், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காமல் ஏற்படுத்தப்படும் முதலீடுகள் என பல வகைகள் உள்ளன.
முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்த சந்தையில் ஒரு எளிய முதலீட்டு சாதனம் உள்ளது என்றால், அது மியூச்சுவல் பண்ட் எனும் பரஸ்பர நிதி முதலீடுகள் தான். அனைத்து வகையான பண்டுகள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய வர்த்தக மதுரை சார்பாக புதிய கைபேசி செயலி (Mutual Fund Investment Application) ஒன்று கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
செயலியின் சிறப்பம்சங்கள்:
- புதிய கணக்கை தொடங்குவதற்கு, கே.ஒய்.சி.(KYC) நடைமுறை என்ற கட்டுப்பாடு அனைத்து வகை நிதி சாதனங்களுக்கும் உண்டு. இது வங்கி, பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு பொருந்தும். கே.ஐ.சி. பதிவு செய்ய தனியாக படிவம் ஒன்றை நிரப்பி மியூச்சுவல் பண்டு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். இந்த சிக்கலை குறைத்து, வர்த்தக மதுரை செயலியில் இணைய வழியாக இரண்டு நிமிடங்களில் கே.ஒய்.சி. பதிவை நிறைவு செய்யலாம். இந்த முறை செபியின் விதிமுறைக்கு உட்பட்டது.
- முன்னர், மியூச்சுவல் பண்டு முதலீட்டை துவங்க ஒரு வார காலம் ஆகும். ஆனால், தற்போது இந்த செயலியின் வாயிலாக அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
- வெவ்வேறு வகையான நிறுவனங்கள் மற்றும் பண்டுகளில் முதலீடு செய்தாலும் ஒரே செயலியில் உங்களது முதலீட்டு நிலவரங்களை எப்போது வேண்டுமானாலும்(Single Account for Multiple Funds) காணலாம்.
- வங்கியில் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், வர்த்தக மதுரை செயலி மூலம் லிக்விட் பண்டுகளில் உங்கள் தேவைக்கேற்றாற் போல் பணத்தை பரிமாற்றம் செய்து கணிசமான வட்டி வருவாயை பெறலாம். முதலீடு செய்வதும், உங்கள் முதலீட்டில் உள்ள பணத்தை எடுப்பதும் மிகவும் எளிமையான ஒன்று.
- நிதி சம்மந்தமான 10க்கும் மேற்பட்ட கணிப்பான்கள் இந்த செயலியில் உள்ளன. (Dream Home Planning, Dream Car Plan, Future Expenses, Children Education, Retirement Savings, Marriage Fund, Family Protection, Tour / Vacation Plan, Crorepati, SIP and EMI Calculator)
- உங்கள் முதலீடு சார்ந்த மின்னணு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க இ-லாக்கர்(E-Locker) வசதி உண்டு. நீங்கள் முதலீடு செய்திருக்கும் தற்போதைய மதிப்பை உடனடியாக அறிந்து கொண்டு, பி.டி.எப்.(Download Investment Holding Reports) முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- சந்தையில் உள்ள புதிய தகவல்கள் மற்றும் செய்திகளை(Mutual Fund related Information) வர்த்தக மதுரை செயலியின் மூலமே படித்து தெரிந்து கொள்ளலாம். மியூச்சுவல் பண்டுகளில் கவனிக்க கூடிய முக்கிய திட்டங்களும் உங்களுக்கு பரிந்துரைக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள்:
- கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கப்பெறும் வர்த்தக மதுரை ( VARTHAGA MADURAI – MY DREAM PORTFOLIO ) செயலி பாதுகாப்பான நிதி செயலியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் செய்யப்படும் அனைத்து பரிமாற்றங்களும் செபியின் (SEBI – AMFI) அனுமதியுடன் இயங்கப்பட்டு வருகிறது.
- மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கும், பயனாளர்களின் தேவைக்குமான பாலமாக இந்த செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரஸ்பர நிதிகளில் கிடைக்க கூடிய செயலிகள் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மாறுபடும். உதாரணமாக நீங்கள் ஐந்து வெவ்வேறு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், ஐந்து செயலிகள் தேவைப்படும். ஆனால், இங்கே வர்த்தக மதுரை செயலி மூலம் நீங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு திட்டங்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களின் முதலீட்டு நிலவரங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி உண்டு.
- உள்ளீடு செய்யப்படும் ஒவ்வொரு தரவுகளிலும்(Filled Information) கவனமாக பதிவு செய்வது அவசியம். உங்கள் பான்(PAN) எண்ணை கொண்டு தான் ஒவ்வொரு தகவலும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. நாமினியை பதிவு செய்வது, வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். இருப்பினும் தவறு ஏதேனும் ஏற்பட்டால், இதனை பின்னாளில் திருத்துவதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய கணக்கை துவங்குவதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வருபவர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
Varthaga Madurai Mutual Funds App – How to use Guide
நினைவில் கொள்ளுங்கள்:
பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் முன்னர், உங்களுக்கான நிதி இலக்குகளை திட்டமிட்டு பின்பு முதலீடு செய்வது சிறந்தது. மியூச்சுவல் பண்டுகளில் குறைந்த ரிஸ்க் முதல் அதிக ரிஸ்க் வரை உள்ள திட்டங்கள் ஏராளம். எனவே சரியான புரிதலை ஏற்படுத்தி கொண்டு முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.
செயலி மற்றும் மியூச்சுவல் பண்ட் சார்ந்த உங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால், பதிவு செய்ய…
https://varthagamadurai.com/contact/
அல்லது
+91 9500 438 549 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
Super sir
LikeLike