எல்.ஐ.சி. நிறுவனம் வாங்கிய பங்குகள் என்னென்ன ?
LIC India’s Stock Portfolio and Shareholdings
நாட்டில் உள்ள பல சிறு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நாணய சங்கங்கள் ஆகியவை உள்ளடங்கிய 245 நிறுவனங்கள் 1956ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இணைக்கப்பட்டன. இவையே பின்னர் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) ஆக சொல்லப்பட்டது. நாட்டின் ஒரே பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இந்தியா மட்டுமே. ஆயுள் காப்பீட்டு துறையில் 23 தனியார் நிறுவனங்கள் உள்ளன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனம் துவங்கியது முதல் தற்போது வரை ஏகபோக தனியுரிமை உள்ள பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகவே வலம் வந்துள்ளது. பொதுவாக எல்.ஐ.சி.யில் காப்பீட்டை பெற்றவர்கள் தங்கள் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படவில்லை என எண்ணி கொண்டிருக்கிறார்கள். காப்பீட்டு திட்டத்தை பொறுத்து அவை பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்பதே உண்மை.
இன்றையளவில் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் இந்த நிகழ்வை ஏற்று கொள்ளவில்லை என்றாலும், வரக்கூடிய நிதியாண்டில் எல்.ஐ.சி. இந்தியா பொதுத்துறை காப்பீடு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது அவர்களுக்கு தெரிய கூடும். நம் நாட்டை பொறுத்தவரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யாத பொதுத்துறை நிறுவனங்கள் இல்லையென்றே சொல்லலாம்.
அரசு மற்றும் தனியார் துறையில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். (Provident Fund & NPS) தொகையும் சிறிய அளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதுபோக அரசின் ஒப்புதலுடன் நாட்டில் உள்ள பல பொதுத்துறை நிறுவனங்கள் சந்தையில் பல வருடங்களாக பட்டியலிடப்பட்டு வருகின்றன. எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 32 லட்சம் கோடி ரூபாய்.
இதன் துணை நிறுவனங்களாக எல்.ஐ.சி. ஹௌசிங் பைனான்ஸ், எல்.ஐ.சி. மியூச்சுவல் பண்டு, ஐ.டி.பி.ஐ. வங்கி, எல்.ஐ.சி. கார்ட்ஸ், பென்ஷன் பண்டு நிறுவனம் மற்றும் எல்.ஐ.சி. இன்டர்நேஷனல். சொல்லப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் எல்.ஐ.சி. யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளவை. இவை போக நாட்டில் உள்ள பல பொது பட்டியலிடப்பட்ட(Public Listed Companies) நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனம் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. மாருதி சுசூகி, ஐ.டி.சி., எல் & டி, மஹிந்திரா, பிரிட்டானியா, டைட்டன், ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா, ஹீரோ மோட்டோகார்ப், இன்போசிஸ், சன் பார்மா, ரிலையன்ஸ் என பல பிராண்டுகள் கொண்ட நிப்டி(Nifty Stocks) பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் வைத்துள்ளது.
வங்கி துறையில் எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., யெஸ் வங்கி, ஆக்ஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, கோடக் மஹிந்திரா, கனரா வங்கி, சிண்டிகேட், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளது. என்.டி.பி.சி., சீமென்ஸ், போஸ்ச்(Bosch), பவர் கிரிட், நேஷனல் அலுமினியம் கம்பெனி(NALCO), டாட்டா கெமிக்கல்ஸ், ஜி.இ. பவர்(GE Power) ஆகியவை இதன் முக்கிய பங்கு நிறுவனங்களில் ஒன்றாகும்.
எல்.ஐ.சி. நிறுவனம் பங்குச்சந்தையில் கால்பதிக்காத முக்கிய நிறுவனங்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு அதன் வாங்கும் திறன் எப்போதும் அதிகமாக உள்ளது. இதற்கு அதன் காப்பீட்டை பெறும் வாடிக்கையாளர்களும் ஒரு காரணம். ஐ.டி..சி. நிறுவனத்தில் இதன் பங்களிப்பு 16 சதவீதமும், எல் & டி நிறுவனத்தில் 14 சதவீதமும் உள்ளது. மாருதி மற்றும் பிரிட்டானியா நிறுவனத்தில் முறையே 7 சதவீதம் மற்றும் 6 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இத்தாலி நிறுவனமான டெலிட்(Telit) கம்யூனிகேஷன் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. வைத்துள்ளது.
சமீபத்தில் அல்ட்ரா டெக் சிமெண்ட், நேஷனல் அலுமினியம், ஏர்டெல், குஜராத் பெட்ரோநெட், ஏர்டெல், எக்சைட்(Exide), ஹிந்துஸ்தான் ஜிங்க் ஆகிய நிறுவனத்தில் தனது பங்குகளை அதிகப்படுத்தியுள்ளது. நாட்டில் ஒரு வங்கியை கையகப்படுத்தியுள்ள ஒரே காப்பீடு நிறுவனம் எல்.ஐ.சி. தான். காப்பீடு ஒழுங்குமுறை விதிகளின்படி, ஒரு காப்பீட்டு நிறுவனம் தான் வாங்கிய எந்தவொரு நிறுவனத்திலும் 15 சதவீதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருக்க கூடாது. தற்போது எல்.ஐ.சி. இந்தியா ஐ.டி.பி.ஐ. வங்கியில் 51 சதவீதம், எல்.ஐ.சி. ஹௌசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் 40 சதவீதம் வைத்துள்ளது. இது வருங்காலத்தில் குறைக்கப்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையில் பங்கு கொள்ளாவிட்டாலும், உள்ளூர் முதலீட்டாளர்களில் பரஸ்பர நிதிகள் தவிர்த்து, எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனம் தான் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை