10 நாட்கள் தடை செய்யப்பட்ட சீன பங்குச்சந்தை வர்த்தகம் – கொரோனா வைரஸ்
China Stock Exchange Shuts down till February 3 – Novel Coronavirus 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை சீனாவில் மட்டும் 213 பேர் இறந்துள்ளனர். 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் சூழலியல் ஆர்வலர்கள் சீனாவில் உள்ள வனவிலங்கு சந்தையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். பல்லுயிர் மீது பாதிப்பை ஏற்படுத்துவது மற்றும் கடல் உணவு சந்தையில் சட்டவிரோதமாக செயல்பட்டதன் மூலமே கொரோனா வைரஸ் வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். உலக சுகாதார அமைப்பும் அவசர நிலையை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
சீனாவில் கடந்த 24ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வசந்தகால விழா விடுமுறையாகும். அங்கு இயங்கும் அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இருக்கும். அதே வேளையில் சீன பங்குச்சந்தைக்கு ஜனவரி 24,27, 28,29,30 தேதிகளுக்கு மட்டுமே விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீன பங்குச்சந்தை வர்த்தகம் பத்து நாட்களுக்கு மூடும் சூழ்நிலையை மேற்கொண்டது. சீனாவின் ஷாங்காய் காம்போசிட்(SSE – Shanghai Stock Exchange) குறியீடு கடந்த 23ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. அன்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.75 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஷாங்காய் குறியீடு.
அதன் பின்னர் சீன பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கப்படவில்லை. மேலும் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை சீன பங்குச்சந்தைகள் திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது. இது உலகளவில் ஒரு அசாதாரண சூழலை சந்தை அளவில் உருவாக்கியுள்ளது. சீனாவில் நடைபெறும் எதிர்மறையான நிகழ்வு மற்ற சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தாலும், இது நீண்டகாலம் நீடிப்பதற்கான விஷயமாக இல்லை.
சீன பங்குச்சந்தை இறங்கும் மற்றும் அதன் பொருளாதாரம் வலுவிழக்கும் என்ற காரணத்தால், அது அமெரிக்க சந்தைகளுக்கு சாதகமாக உள்ளது. உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையில், மற்றொரு வீழ்ச்சியை பற்றி பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டு வருகின்றனர். சில நாடுகளில் தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக முன்னெச்சரிகைக்கு தயாராகி வருகிறது.
நடப்பு 2020ம் ஆண்டில் அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் அதன் பொருளாதாரம் வீழ்ச்சி பெற 26 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க்(Bloomberg) கூறியுள்ளது. அதே வேளையில் இம்முறை பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் அது ஆசியாவிலிருந்து நிகழக்கூடும் என மேற்கோள் காட்டப்படுகிறது. சீன பங்குச்சந்தை வரவிருக்கும் 4ம் தேதி சந்தை துவங்கும் நிலையில் அதன் தாக்கம் தெரியும். இந்திய பங்குச்சந்தை கடந்த ஒன்பது வர்த்தக தினங்களில் 1400 புள்ளிகள் வரை (சென்செக்ஸ்) இறக்கம் கண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கல்(Budget India T20) மட்டுமே, குறுகிய காலத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு ஊக்குவிப்பதாக இருக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை