5 விமான நிலையங்களை கைப்பற்றியுள்ளது அதானி நிறுவனம்
Adani Infra wins as highest bidder to operate five airports in India
மத்திய அரசு கடந்த சில வருடங்களாக அரசு துறைகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை கொண்டு இயங்கி வருகிறது. பொது – தனியார் கூட்டு (Public Private Partnership) மாதிரியின் அடிப்படையில் அரசாங்கத்தை சார்ந்த பல துறைகளில் உலகளவிலான உயர்தர உட்கட்டமைப்பை கொண்டு வரும் முயற்சியில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தி வருகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாட்டில் முதன்முறையாக தனியார் நிறுவனங்களை மட்டுமே கொண்டு, விமான நிலையங்களை இயக்குவதற்கான முயற்சியை கடந்த சில காலங்களாக மத்திய அரசு எடுத்து வந்தது. இதற்கான ஏல முறையை பொது-தனியார் கூட்டு மதிப்பீட்டு குழு (Public Private Partnership Appraisal Committee – PPPAC) கையாண்டு வருகிறது. இந்த குழுவின் உறுப்பினர்களாக நிதி ஆயோக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி, நிதி மற்றும் விமானத்துறை அமைச்சகங்களின் செயலாளர்கள் அடங்குவர்.
தனியார் நிறுவனங்கள் விமான நிலையங்களை இயக்குவதற்கான ஏலத்தில் மொத்தம் பத்து நிறுவனங்கள் கலந்து கொண்டன. இவைகளின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 32 மற்றும் முதல் கட்டமாக ஆறு விமான நிலையங்களில் ஐந்து விமான நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
ஏல முறை பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்(Bid per passenger basis) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஏலத்தில் ஜி.எம்.ஆர்(GMR), பி.என்.சி.(PNC), அதானி(Adani Infra), ஆம்ப் கேப்பிடல்(Amp Capital), ஆட்டோ ஸ்ட்ரேட்(Autostrade), கொச்சி சர்வதேச விமான நிலையம் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அறிவிக்கப்பட்ட ஆறு விமான நிலையங்களில் ஐந்து நிலையங்களில் அதானி நிறுவனம், மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஏலத்திற்கான விற்பனை தொகையை அதிகமாக கொண்டிருந்தது.
திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு பயணி ஒருவருக்கு ரூ.168/- வீதம் கொடுத்து ஏலத்தில் முதலிடத்தை பிடித்தது அதானி. இதற்கு அடுத்தபடியாக கே.எஸ்.ஐ.டி.சி. நிறுவனம் பயணி ஒருவருக்கு ரூ. 135/- ஆக அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. இதே போல மங்களூரு விமான நிலையத்திற்கு அதானி இன்ப்ரா நிறுவனம் 115 ரூபாயும், கொச்சின் சர்வேதச நிறுவனம் 45 ரூபாயும், ஜி.எம்.ஆர். 18 ரூபாயை ஏல மதிப்பாக அறிவித்தது.
அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ விமான நிலையங்களுக்கும்(Airports Authority of India -AAI) அதானி நிறுவனம் அதிக மதிப்பை ஏலத்தில் அறிவித்திருந்தது. இதன் மூலம் சொல்லப்பட்ட ஐந்து விமான நிலையங்களை இனி அதானி இன்ப்ரா நிறுவனம் நிர்வாகம் செய்யும். கவுகாத்தி விமான நிலையத்திற்கான ஏல விற்பனை, செவ்வாய் கிழமை(26-02-2019) அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி(Guwahati) ஏல விற்பனை முடிந்தவுடன் நியமிக்கப்படும் நிறுவனங்களின் முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில் பார்த்தால் அதானி நிறுவனம் ஏற்கனவே 5 விமான நிலையங்களின் ஏலத்தில் முதலிடத்தில் உள்ளது. ஏலத்தில் விமான நிலையங்களை கைப்பற்றும் நிறுவனங்கள் அடுத்த 50 வருடங்களுக்கு நிர்வாகம் செய்யலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை