ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் 11 பொதுத்துறை வங்கிகள் – வாராக்கடன் நெருக்கடி
11 PSU Banks under RBI Vigilance – NPA issue
கடந்த சில ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடி அதிகரித்துக்கொண்டே போகிறது. வங்கிகளில் பெருமளவிலான கடன்களை வாங்கி விட்டு, திரும்ப செலுத்த முடியாமல் சில நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன மற்றும் சில நிறுவனங்களின் நிறுவனர்கள் தலைமறைவாவதும் அடிக்கடி நடக்கும் சம்பவங்களாக உள்ளன.
வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடனை திரும்ப பெற முடியாமல், அவற்றை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாராக்கடன் பட்டியலில்(NPA -Non performing asset) சேர்த்து விடுகின்றன. சில சமயங்களில் இந்த வாராக்கடன் தொகையே வங்கியின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. வாராக்கடன் அளவிலும், தனியார் துறை சார்ந்த வங்கிகளை காட்டிலும் பொதுத்துறை வங்கிகளில் தான் வாராக்கடன் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்(Bad Loans) அளவு ரூ. 7 லட்சம் கோடியை தாண்டியுள்ளது, அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் வாராக்கடன் 1.03 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியின்(SBI) வாராக்கடன் 1.87 லட்சம் கோடி ரூபாயில் உள்ளது. அதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் தொடர்கிறது. சமீபத்தில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி புகார் எழுந்ததும், மற்ற பொதுத்துறை வங்கிகளிலும் அதன் பாதிப்பு தெரிந்தது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பங்கு மூலதனம் வாயிலாக ரூ. 52,000 கோடியை ஒதுக்கும் ஏற்பாடு செய்தது. இருப்பினும் வங்கிகளில் வாராக்கடன் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் தொடர்ச்சியாக தான் வங்கிகளின் இணைப்பும்(Merger of Banks) கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது.
இந்நிலையில் பாரத ரிசர்வ் வங்கி(RBI), வாராக்கடன் பிரச்சனையில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. தற்போது, PCA (Prompt Corrective Action) என்ற கட்டமைப்பில் 11 பொதுத்துறை வங்கிகளை அதன் கண்காணிப்பில் கொண்டு வந்திருக்கிறது. இந்த கண்காணிப்பின் கீழ் வரும் வங்கிகளுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் வரும் 11 பொதுத்துறை வங்கிகளும் வாராக்கடன் நெருக்கடியால் சேர்க்கப்பட்டுள்ளது. PCA கட்டமைப்பின் கீழ் வரும் வங்கிகள் புதிதாக கிளைகள் ஆரம்பித்தல், வேலைக்கு ஆட்சேர்ப்பு போன்றவற்றை மேற்கொள்ள முடியாது.
மேலும் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படும் கடன் அளவிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மதிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு(High Rating) மட்டுமே கடன் கொடுக்க முடியும். வங்கிகளை வாராக்கடன் நெருக்கடியிலிருந்து மீட்டு, ஒழுங்கமைக்க இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகிறது.
RBI கண்காணிப்பின் கீழ் உள்ள வங்கிகள்:
- Allahabad Bank
- Bank of Maharashtra
- Bank of India
- Central Bank of India
- Corporation Bank
- Dena Bank
- IDBI Bank
- Indian Overseas Bank
- Oriental Bank of Commerce
- UCO Bank
- United Bank of India
மேலும் சில வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ( Andhra Bank, Canara Bank, Punjab National Bank, Punjab & Sind Bank, Union Bank)
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை