Tag Archives: vodafone idea

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். டெலிகாம் மூடப்படுகிறதா ?

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். டெலிகாம் மூடப்படுகிறதா ?

Is BSNL Telecom in tamilnadu shutting down ?

 

தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியால் குரல் வழி அழைப்புகளும்(Voice based Calls), இணைய சேவைகளும் மேம்பட்டு கொண்டிருக்கின்றன. முன்னர் அழைப்புகளுக்கும், இணைய சேவைகளுக்கும் தனித்தனியே கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின்(JIO) வருகைக்கு பின்னர் அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் ஒருமித்த கட்டணங்களை வசூலிக்க தொடங்கின.

 

இன்று தொலைத்தொடர்பு சேவையில் அளவில்லா அழைப்புகள்(Unlimited calls) மற்றும் இணைய சேவைகளுக்கு ஒரே கட்டணமாக பெறப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு பயனருக்கான சராசரி வருவாயும்(Arpu) நிறுவனத்திற்கு அதிகமாக கிடைத்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர்கள் முன்பை விட, தற்போது கூடுதல் கட்டணத்தை மறைமுகமாக செலுத்தி வருகின்றனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இணைய சேவையில் நுகர்வோரின் தேவை ஒவ்வொரு நாளும் மாறுபட்டு கொண்டிருக்கும் நிலையில், அதனை சார்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் புதுமையை கொண்டு வரும் கட்டாயத்தில் உள்ளன. இதனை சமாளிக்க முடியாத நிறுவனங்கள் மற்றும் கடனில் தத்தளிக்கும் டெலிகாம் நிறுவனங்கள் சேவையை விட்டு விலகும் நிலையில் உள்ளது. ஏர்செல், யூனினார், வோடபோன்-ஐடியா(Vodafone-Idea) இணைப்பு போன்றவற்றை சொல்லலாம்.

 

போட்டியை சமாளிக்க முடியாத நிறுவனங்களில் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல்(MTNL) மற்றும் பி.எஸ்.என்.எல்.(BSNL) நிறுவனமும் அடங்கியுள்ளன. சமீபத்தில் தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்பட உள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

 

இதனை ஏற்கனவே மறுத்திருந்த தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘ பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிதி சிக்கலில் உள்ளன. கட்டண விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்(Tariff Competition), சேவையில் ஜியோவின் போட்டி ஆகியவற்றால் எம்.டி.என்.எல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நிறுவனத்தை மூடும் எண்ணம் இல்லை ‘ என கூறியிருந்தார்.

 

கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்க முடியாமல் உள்ளன. பி.எஸ்.என்.எல். டெலிகாமில் சுமார் 1.64 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தொலைத்தொடர்பு துறையில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. இதன் சேவைகள் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு சார்ந்த சேவை நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனர்கள் – ரிலையன்ஸ், வோடபோன்

பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனர்கள் – ரிலையன்ஸ், வோடபோன்  

Pledged shares by the Promoters – Reliance Infra, Vodafone

 

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவருவது போன்று, நிறுவனங்களின் பங்குகளில் உரிமையாளர் வைத்திருக்கும் பங்கு சதவீதமும் ஒவ்வொரு காலாண்டிலும் பங்குச்சந்தை அமைப்புக்கு தெரிவிக்கப்படும். கடந்த ஜனவரி – மார்ச் 2019ம் காலாண்டில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பி.எஸ்.இ. 500(BSE 500) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஜனவரி-மார்ச் மாத காலத்தில் இவர்களின் பங்கு அடமான விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் இன்ப்ரா(Reliance Infra) மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல்(Reliance Capital) முறையே 22 மற்றும் 15 சதவீத பங்குகள் மார்ச் காலாண்டில் அடமான விகிதத்தை அதிகரித்துள்ளது. இதுவரை ரிலையன்ஸ் இன்ப்ராவின் மொத்த அடமானம் 98 சதவீதம் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் 97 சதவீதமாகும். ஏற்கனவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்(Rcom) நிறுவனம் தனது முழு பங்குகளையும் அடமானம் வைத்து விட்டு, கடனில் தத்தளித்து கொண்டு தற்போது திவால் நிலைக்கு வந்து விட்டது.

 

டிஷ் டிவி(Dish TV) நிறுவனர்களின்  பங்குகள் 94.6 சதவீதம் வரை அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ஜீ டிவி(Zee) நிறுவனம் 66 சதவீதமும், எவெரெடி(Eveready) நிறுவனர்கள் 50 சதவீதமும், சன் பார்மா 11 சதவீதமும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனம் 78 சதவீதம் என்ற அளவிலும் நிறுவனர் பங்குகளை அடமானம் வைத்துள்ளது.

 

இது போல வோடபோன் நிறுவனம் 44 சதவீத பங்குகளை வோடபோன் ஐடியா நிறுவனத்தில் அடமானம் செய்துள்ளது. தற்போது வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனத்தை 71 சதவீத பங்களிப்புடன் வோடபோன் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனங்கள் நிர்வாகம் செய்து வருகிறது.

 

கடந்த காலாண்டில் அசோக் லேலாண்ட் நிறுவனமும் 2.3 சதவீதம் என்ற அளவில் பங்குகளை அடமானம் வைத்துள்ளது. இதன் மொத்த நிறுவனர்களின் பங்கு அடமான விகிதம் 6.7 சதவீதமாகும். பியூச்சர் குழுமத்தின் (பிக் பஜார்) பியூச்சர் லைப் ஸ்டைல் நிறுவனம் 23 சதவீத பங்குகளையும், JSW நிறுவனம் 60 சதவீத பங்குகளையும் மற்றும் ஜே.கே. டயர் 28 சதவீதமும் உரிமையாளர்களின் பங்குகளை அடமானம் செய்துள்ளது.

 

பொதுவாக நிறுவனர்களின் நிறுவனர்கள் தங்கள் சொந்த தேவை அல்லது வணிக நோக்கங்களுக்காக, தாங்கள் வைத்திருக்கும் பங்குகளை மற்றொரு நிறுவனத்திடமோ அல்லது   வங்கிகளிடமோ அடமானம் வைப்பதுண்டு. இது ஒரு நீண்ட கால முதலீட்டாளருக்கு ஆரோக்கியமான விஷயமல்ல. நல்ல முதலீட்டாளர்கள், நிறுவனர்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ள பங்குகளில் முதலீடு செய்வதில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அதென்ன குறைந்தபட்ச ரீசார்ஜ் – 35 ரூபாய் திட்டம் ?

அதென்ன குறைந்தபட்ச ரீசார்ஜ் – 35 ரூபாய் திட்டம் ?

25 Crore Mobile users be moved to Minimum Recharge Plan Rs. 35 – Telecom in India

 

கடந்த காலத்தில் கைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு இருந்த போதும், ப்ரீபெய்ட் (Prepaid) என்று சொல்லும் முன்பணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளருக்கும், பேசி விட்டு பின்பு பணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் (Postpaid) வாடிக்கையாளருக்குமான இடைவெளி மிக அதிகமாக இருக்கும். ஆனால் ஸ்மார்ட் போன் மற்றும் 4G அலைவரிசை வந்த பிறகு இதற்கான இடைவெளி வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது குறைந்தபட்ச பயன்பாட்டின் அளவு அதிகரித்தது தான்.

 

முன்னர் கைபேசி வாடிக்கையாளர்களின் சராசரி மாத பயன்பாட்டு செலவு (Average Usage) ரூ. 50 ஐ தாண்டாது. விலை வெட்டிகள் (Rate Cut), உயர்த்திகள் (Boosters) மற்றும் முழு டாக் டைம் என பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இன்று அளவில்லா அழைப்புகளும், இணைய பயன்பாடு (Unlimited Calls and Data) என்ற இரு விஷயம் மட்டுமே வாடிக்கையாளரை தக்க வைத்து கொண்டுள்ளது. இதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானமும் அதிகரித்துள்ளது.

 

சமீபத்தில் தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட தகவல்களின் படி, ஏர்டெல் மற்றும் ஜியோவில் ஒரு பயனருக்கான சராசரி மாத வருவாய் (Average Reveneu per user -ARPU) 100 ரூபாய்க்கு குறையாமல் இருப்பதாகவும், வோடபோன் – ஐடியா இணைப்பிற்கு பிறகு அதன் ஒரு பயனருக்கான சராசரி மாத வருவாய் 88 ரூபாய் என்ற அளவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 25 கோடி வாடிக்கையாளர்கள் ஒரே கைபேசியில் இரு சிம் கார்டை பயன்படுத்துபவராக உள்ளனர் என்றும், அவர்களின் மாத ரீசார்ஜ் 10 ரூபாய்க்கு குறைவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தும் இது போன்ற வாடிக்கையாளர்களில் ஏர்டெல் நிறுவனம் (Airtel) 10 கோடி நபர்களையும், வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 15 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.

 

இது போன்ற வாடிக்கையாளர்களின் வாயிலாக ஏர்டெல் நிறுவனம் ஆண்டுக்கு 1200 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது. அதே நேரத்தில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) வருடத்திற்கு ரூ.1800 கோடியை வருமானமாக பெறுகிறது. இவர்களை குறைந்த பட்ச ரீசார்ஜ் (Minimum Recharge) என்ற அமைப்பில் கொண்டுவர இந்த இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டு கொண்டுள்ளது.

 

கடந்த சில வாரங்களாக, ‘ இனி இன்கமிங் கால்கள் இலவசம் இல்லை (No Free Incoming Calls)‘ என்ற செய்தி மக்களிடையே வந்த நிலையில், தற்போது இந்த செய்தியும் கைபேசி வாடிக்கையாளர்கள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் – 35 ரூபாய் என்ற திட்டத்துடன் இரு நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளது. இதனால் இனி மாதத்திற்கு குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செலுத்தினால் மட்டுமே பயன்பாட்டை தொடர முடியும். தவறும் பட்சத்தில் வெளிச்செல்லும் அழைப்புகள் (Outgoing Calls) நிறுத்தப்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளது.
( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சொல்லப்பட்ட 25 கோடி வாடிக்கையாளர்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் – 35 ரூபாய் திட்டத்திற்கு மாற்றப்பட்டாலே ஏர்டெல் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் 900 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதுவே வோடபோன் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ. 1300 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கக்கூடும். இந்த 25 கோடி வாடிக்கையாளர்களும் 2G அலைவரிசையில் இருப்பவர்கள் என்றும், இவர்கள் 3G மற்றும் 4G வரிசைக்கு மாற்றம் பெறும் போது, மாத பயன்பாடு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சந்தைக்கு வந்த பிறகு, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடைய கடும் போட்டி நிலவுகிறது. 35 ரூபாய் திட்டம் ஜியோ நிறுவனத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து மாத குறைந்த பட்ச தொகையாக ரூ. 49 ஐ நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜியோவின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) ரூ. 130 ஆக உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com