Tag Archives: gdp growth

2018-19 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆக இருக்கும் – ஆசிய வளர்ச்சி வங்கி

2018-19 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆக இருக்கும் – ஆசிய வளர்ச்சி வங்கி

India GDP growth at 7.3 % for FY 2018-19 – Asian Development Bank

 

பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2018-19 ம் நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இதனிடையே ஆசிய வளர்ச்சி வங்கி இன்று தனது வெளியீட்டில் கூறியதாவது, நடப்பு 2018-19 ம் நிதியாண்டில் இந்தியாவின் GDP என்று சொல்லக்கூடிய பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆக இருக்கும் என கணித்துள்ளது.

 

2019-20 ம் நிதி ஆண்டில் இதன் தொடர்ச்சியாக 7.6 சதவீதமாகவும், அதற்கு அடுத்த வருடத்தில் 7.8 % ஆக இருக்கும் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது. பணமதிப்பிழப்புக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் இந்த பொருளாதார வளர்ச்சி விகித எதிர்பார்ப்பாக உள்ளது என சொல்லப்பட்டுள்ளது.

 

GST(Goods and Service Tax) உற்பத்தி அதிகரிப்பு, வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் மற்றும் முதலீட்டு மறுசீரமைப்பு போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பணமதிப்பிழப்புக்கு பின், கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 % ஆக இருந்தது. புதிய வரி விகித மாற்றங்களும் வருங்கால வளர்ச்சிக்கு துணைபுரியும்.

 

பொதுவாக சொல்லப்பட்ட வளர்ச்சியானது, கிராமப்புற நுகர்வு, நிதி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் எளிமையான கொள்கை, ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணைபுரியும் விதத்தில் இருக்கும்.

 

அதே சமயத்தில் நகர்ப்புற நுகர்வும் மேம்படும் மற்றும் உள்கட்டமைப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போன்றவை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பொருளாதார ஆய்வறிக்கை 2018 – பொது பட்ஜெட்

 

பொருளாதார ஆய்வறிக்கை 2018 – பொது பட்ஜெட்

Economic Survey 2018 for the Budget India

 

 

2018-2019 க்கான  பொது பட்ஜெட்டை முன்னெடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று (29-01-2018) பொருளாதார ஆய்வறிக்கை 2018 தாக்கல் செய்யப்பட்டது. குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் (Ramnath Kovind) அமர்வில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ (Arun Jaitley) பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.

 

2018-2019 பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வரி சம்மந்தமான சலுகைகள் இருக்கலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

பொருளாதார ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்ட சில துளிகள் பின்வருமாறு:

 

  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP Growth) வளர்ச்சி 2017-18 ல் 6.75 % ஆகவும், 2018-19 ல் 7  –  7.5 % ஆகவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • நாட்டின் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) 2017-18 ல் 3.2 % எனவும், சில்லறை பணவீக்கம் (2017-18) – 3.3 % எனவும் கூறப்பட்டுள்ளது.

 

  • அன்னிய செலவாணி கையிருப்பு (2017-2018) – 40,900 கோடி அமெரிக்க டாலராகவும் உள்ளது.

 

  • தொழில் துறை வளர்ச்சி விகிதம் 2017-18 ல் 3.2 % ஆகவும், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம்(2017-18) ல் 12.1 % எனவும் தகவல் தரப்பட்டுள்ளது.

 

  • வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 % உயர்ந்துள்ளதாகவும், பண மதிப்பிழப்பு (Demonetisation) நிகழ்வு இதற்கு மிகவும் துணைபுரிந்துள்ளதாக இருக்கிறது.

 

  • கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை மாற்றத்தால், எண்ணெய் (Oil Prices) விலையின் தாக்கம் அதிகம் உள்ளதாகவும், இது முக்கிய பிரச்சனையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • பணவியல் கொள்கை (Monetary Policy) சீராக இருக்கிறது. ஏற்றுமதிக்கான புதிய கொள்கையால், ஏற்றுமதி துறை வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

 

  • வீட்டு மனை துறையில் புதிய விதிமுறையால் மாற்றம் ஏற்பட்டு, நுகர்வோருக்கு பயனளிக்க கூடிய வகையில் அமையும்.

 

  • தனியார் முதலீடு மீட்டெடுத்தலில் பெரும்பங்காற்ற தயாராக உள்ளது. ஜி.எஸ்.டி (GST) பதிவு அதிகரித்துள்ளதாகவும், தொழிலுக்கு அது சாதகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

  • விவசாயம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நடுத்தர காலத்தில் இருப்பதாகவும், அவற்றில் கவனம் செலுத்தப்படுவதாகவும் உள்ளது.

 

  • புதிய திவால் சட்டம் (Insolvency and Bankruptcy code -IBC) மெருகேற்றப்பட்டு, பொது துறை வங்கிகளுக்கு சாதமாக உள்ளது மற்றும் பொது துறை வங்கிகளின் வாரா கடனும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • விவசாயத்துறையில் பெண்களின் பங்கு முக்கியமானதாகவும், விவசாயிகளின் வருமானத்தை வரும் 2025 க்குள் இரட்டிப்பாக்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

உங்களுடைய கருத்துக்கள்  மற்றும்  தகவலை  இங்கே பகிரலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை