Income Tax save

வருமான வரி சரிபார்ப்பு தளர்வு – செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவு

வருமான வரி சரிபார்ப்பு தளர்வு – செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவு 

One time relaxation for verification of ITR – Deadline by 30 September, 2020

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு வரி தாக்கல்(AY 2020-21) செய்ய வேண்டிய காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது. பொதுவாக இதற்கான காலக்கெடு ஜூலை 31ம் தேதி வரை இருக்கும் நிலையில், இம்முறை செப்டம்பர் 30 வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி வரம்பில் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள வருமானத்திற்கு வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், ஆண்டு வருவாய் (நிதியாண்டு) ரூ. 2.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் வரி தாக்கல் செய்வது அவசியமாகும். தவறும் போது, அதற்கான அபராத கட்டணம் விதிக்கப்படும்.

மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான (Assessment Year) 2015-16, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய வருடங்களுக்கான வருமான வரி தாக்கலை ஒருவர் செய்திருந்தாலும், அதனை சரி பார்த்தல்(Verification of ITR) மூலம் நிறைவு செய்வதற்கு, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை சலுகை காலம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் ஒருவர், அதனை Verification of ITR – EVC என சொல்லப்படும் சரிபார்ப்பு முறையை நிறைவு செய்வது அவசியம். இதனை செய்தால் மட்டுமே, அது முழுமை பெற்றதாக வருமான வரி அலுவலகத்தால் கருதப்படும்.

அதாவது 2014-15ம் நிதியாண்டு(AY 2015-16) முதல் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்திருந்தும், சரிபார்ப்பு செய்யாத நிலையில் தற்போது ஒரு முறை சலுகையாக செப்டம்பர் 30 வரை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. வரி தாக்கல் சரிபார்ப்பு செய்திருந்தால் மட்டுமே, நீங்கள் கோரிக்கை விடுத்த தொகை(Refund amount) திரும்ப கிடைக்கப்பெறும்.

சரிபார்ப்பு முறையை நிறைவு செய்ய கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தலாம்:

வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் உங்கள் பயனர்(Login Credentials) விவரங்களை கொண்டு உள்நுழைந்த பிறகு,

  • ஆதார் எண்ணுடன் இணைத்திருக்கும் கைபேசி எண்ணை பயன்படுத்தி OTP முறையில் சரிபார்ப்பு முறையை நிறைவு செய்யலாம். 
  • உங்களது வங்கி கணக்கு மூலம் (Net banking)
  • EVC முறை மூலம்
  • வருமான வரி அலுவலகத்திற்கு தபால் மூலம்(By Post), நீங்கள் தாக்கல் செய்த ஐ.டி.ஆர். படிவத்தை அனுப்பலாம்.

நம் நாட்டில் இருவகையான வரி விதிக்கப்படுகிறது. தனிநபர் வருமானத்திற்கான வரி, நேரடி வரி பிரிவில்(Direct Tax) உள்ளது. நீங்கள் ஈட்டிய வருமானத்திற்கு நேரடியாக அரசுக்கு வரி செலுத்தும் நிலையில், அவையனைத்தும் நேரடி வரி பிரிவில் வரும். மற்றவை மறைமுக வரி பிரிவில் உள்ளவை. உதாரணமாக நீங்கள் நுகரும் பொருட்கள் மற்றும் சேவை மூலம் வருபவை மறைமுக வரிகளாகும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.