Yes Bank Crisis

யெஸ் வங்கியை புனரமைக்கும் அரசின் திட்டம் – ஒன்று கூடிய தனியார் வங்கிகள்

யெஸ் வங்கியை புனரமைக்கும் அரசின் திட்டம் – ஒன்று கூடிய தனியார் வங்கிகள் 

Govt’s Plan to restructuring Yes Bank – Private Banks Participation

நேற்றைய அமைச்சரவையில் முதலீட்டை பெற முடியாமல் கடனில் தத்தளித்து கொண்டு இருக்கும் யெஸ் வங்கியை மீட்டெடுக்க புனரமைப்பு திட்டம் சொல்லப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக அதற்கான ஒப்புதலும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கியும், மற்ற பங்குகளை தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் வாங்கி கொள்வதற்கும் திட்டம் சொல்லப்பட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனர் திரு. ராணா கபூர் பதவியிலிருந்து விலகிய பின்னர், புதிய தலைவராக திரு. ரவ்நீத் கில் வந்தார். இவர் வங்கிக்கான முதலீட்டை பெறும் நோக்கில், யெஸ் வங்கி தனது செயல்பாட்டில் சுணக்கத்தை சந்தித்தது. இதனையடுத்து கடந்த வாரம் யெஸ் வங்கியை பாரத ரிசர்வ் வங்கி(RBI) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பணமோசடி சம்மந்தமாக நிறுவனரும் கைது செய்யப்பட்டார்.

ஆரம்ப நிலையில் ஐ.சி.ஐ.சி. வங்கி, யெஸ் வங்கியில் ரூ. 1000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. பங்கின் முகமதிப்பு(Facevalue) விலை ரூ. 2 ஆக இருக்கும் நிலையில், கூடுதலாக 8 ரூபாயை கொண்டு 100 கோடி பங்குகளை (பங்கு ஒன்றுக்கு 10 ரூபாய்) வாங்க உள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. பாரத ஸ்டேட் வங்கி ஏற்கனவே தனது முதலீடாக ரூ. 7,250 கோடியை சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பங்கு ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 725 கோடி பங்குகளை கையகப்படுத்த உள்ளது.

இது போல எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank) தனது முதலீடாக ரூ. 1000 கோடியும், ஆக்ஸிஸ் வங்கி ரூ. 600 கோடி முதலீட்டையும் யெஸ் வங்கியில் மேற்கொள்ள உள்ளது. ‘ யெஸ் வங்கியை புனரமைப்பதன் மூலம், வங்கி வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். மேலும் நாட்டில் ஒரு நிலையான நிதி சூழல் நிலவும் எனவும், வங்கியமைப்பு முறையை ஒழுங்காக வைத்திருக்க இது போன்ற நடவடிக்கை உதவும் எனவும் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் ‘.

யெஸ் வங்கியின் புதிய தலைவரை பாரத ஸ்டேட் வங்கி(SBI) தேர்ந்தெடுக்கும் என தெரிகிறது. கோடக் மஹிந்திரா வங்கியும் யெஸ் வங்கியில் குறிப்பிடத்தக்க முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. இது போக முதலீட்டாளர் திரு. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, விப்ரோ நிறுவனத்தின் டிரஸ்ட் மற்றும் டி மார்ட்(Dmart) நிறுவனத்தின் நிறுவனர் திரு. ராதா கிஷன் தமானி ஆகியோரும் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய உள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கி 49 சதவீத பங்குகளை யெஸ் வங்கியில் வாங்கினாலும், ரிசர்வ் வங்கி திட்டத்தின் படி அடுத்த மூன்று வருடங்களுக்கு யெஸ் வங்கியில் 26 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என சொல்லப்படுகிறது. மற்ற முதலீடுகளையும் யெஸ் வங்கிக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது.

நாட்டின் 4வது மிகப்பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியை மீட்டெடுக்கும் பட்சத்தில் அது இந்திய பொருளாதாரத்தில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். டிஜிட்டல் இந்தியா சேவைக்கு பெயர் போனது இந்த யெஸ் வங்கி, நிறுவனரின் முறைகேட்டுக்கு பின்னரும், பல வங்கிகளின் மூலம் முதலீட்டை பெற உள்ளது வங்கியின் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், சிறு முதலீட்டாளர்களுக்கு வரவிருக்கும் முதலீடுகளால் பெரிதான பலன் எதுவுமில்லை. வங்கிகள் தங்கள் பணத்தை பெறுவதற்காகவே இது போன்ற புனரமைப்பு என்ற குற்றச்சாட்டும் பங்குதாரர்களிடையே ஏற்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s