அனைத்து சுற்றுலா விசாக்களும் நிறுத்தி வைப்பு – மத்திய அரசு
Govt of India Suspends all Tourist Visas till April 15,2020 – COVID – 19
அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு நேற்று(11-03-2020) சந்தையில் 6 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது போல நாஷ்டாக்(NASDAQ) குறியீடும் 4 சதவீத அளவில் இறக்கம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் என்றாலே தற்போது அனைத்து நாடுகளும் குட்டிக்கரணம் போடும் நிலை தான் உள்ளது. பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியான வீழ்ச்சியை சந்தித்து வருவது நம் நாட்டிற்கும் சாதகமான விஷயமாக அமையவில்லை.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சீனாவில் பிரச்சனை ஏற்பட்டால், அது இந்திய பொருளாதாரத்திற்கு சாதகம் என ஒப்புக்கு சொல்லிக்கொண்டாலும், உலக மயமாக்கலுக்கு பிறகு, அனைத்து பொருளாதாரமும் பின்னலை போன்று தான் உள்ளன. அமெரிக்காவில் ஒரு பிரச்சனை என்றால் அது நம் நாட்டையும் பாதிக்க தான் செய்யும்.
மத்திய அரசு சார்பில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் வெளிநாட்டு பயண ஆலோசனையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, தற்போது வரை பெறப்பட்டுள்ள விசாக்கள் (மின்னணு விசா உட்பட) அனைத்தும் வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை நாளை முதல் அமலாகும் எனவும், இவற்றில் அரசு அதிகாரிகள், அரசு சார்பில் செல்லும் தனிநபர்கள், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கும்படியும், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிநாடு செல்ல நேர்ந்தோர், திரும்பும் போது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இது போல நம் நாட்டிற்கு வருபவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு(WHO) கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் நிகழ்வை அவசர நிலை பிரகடனமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகளவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் சுமார் 100 நாடுகளுக்கும் மேல் பரவி உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை