US Fed rate cut mar 2020

அமெரிக்க வங்கி வட்டி விகித குறைப்பு – உலக பொருளாதார எச்சரிக்கை நடவடிக்கை

அமெரிக்க வங்கி வட்டி விகித குறைப்பு – உலக பொருளாதார எச்சரிக்கை நடவடிக்கை 

US Fed Rate Cut to 1 – 1.25 Percent – Warning of Global Slowdown

மூன்று வாரங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து ஒரு கொள்கலனில் சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட பூனை ஒன்று, இப்போது மறுபடியும் சீனாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த பூனை, தற்போது மிகுந்த கட்டுப்பாடுடன் துறைமுகத்தில் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இறைச்சிக்காக தான் இந்த பூனை மீண்டும் சீன நாட்டிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக விலங்குகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பூனையை விடுவிக்க வேண்டுமெனவும், கொரோனா வைரஸ் பற்றிய அறியாமையால் தான் இது போன்ற நிகழ்வு நடைபெறுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

இப்படி தான் உலகளவில் ஒரு சிறு வைரஸ் பாதிப்பின் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலை காணப்படும் நிலையில், கொரோனா வைரஸ் மூலம் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகத்தில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் வேண்டுமானால் கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவாக வெளியேறலாம்.

ஆனால், உலகின் பல நாடுகளில் இன்னும் சரியான மருத்துவ வசதிகள் இல்லை. இது வணிக ரீதியான பயணங்களுக்கு தடையை ஏற்படுத்தும். நேற்று(03-03-2020) அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி (US Federal Reserve) பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த உதவும் வகையில், அமெரிக்க வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை குறைத்துள்ளன. முன்னர் 1.50 – 1.75 சதவீதம் என்ற வட்டி விகிதம் இருந்த நிலையில், தற்போது 1 – 1.25 சதவீதம் என்ற அளவு சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டை பொறுத்தவரை இந்த வட்டி விகித குறைப்பு, கடந்த 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பின் குறைக்கப்பட்ட அதிகபட்ச அளவாகும். இது ஒரு அவசர நடவடிக்கை எனவும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றைய அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் 3 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது.

அமெரிக்காவின் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், உலகளவிலான பொருளாதாரம் மந்தநிலையில் தான் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக பொருளாதாரம் மற்றும் சந்தைகள் அதிக பாதிப்படையாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைவர் பாவெல் கூறியுள்ளார்.

அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கையை போல தான் தாங்களும் எடுத்து வருவதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, வங்கியில் உள்ள டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் குறையும். இதன் காரணமாக நுகர்வு தன்மை மற்றும் சந்தைக்கு சாதகமாக அமையும். அரசு பத்திரங்களின் வட்டி விகிதமும் சற்று அதிகரித்து காணப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s