LIC India life insurance

பங்குச்சந்தைக்கு வரும் திட்டம் தற்போது இல்லை : எல்.ஐ.சி.

பங்குச்சந்தைக்கு வரும் திட்டம் தற்போது இல்லை : எல்.ஐ.சி.

Currently not planning to go for IPO – Life Insurance Corporation of India (LIC)

 

நாட்டில் உள்ள ஒரே பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இந்தியா(LIC India) ஆகும். 245 சிறு மற்றும் குறு காப்பீடு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே, 1956ம் ஆண்டு எல்.ஐ.சி. நிறுவனமாக தொடங்கப்பட்டது. 29 கோடி பாலிசிதாரர்களை கொண்டிருக்கும் இந்நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த காப்பீடு மதிப்பு ரூ. 30 லட்சம் கோடி.

 

இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்யும் ஒரே நிறுவனம் எல்.ஐ.சி யாக உள்ளது. நடப்பு வருடத்தில் இதுவரை பங்குச்சந்தை முதலீடாக 33,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி50(Nifty50) குறியீட்டில் உள்ள 50 நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் 27 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 2.30 லட்சம் கோடி ரூபாய்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடனில் தத்தளித்து கொண்டிருந்த ஐ.டி.பி.ஐ.(IDBI Bank) வங்கியின் முக்கிய பங்குதாரராக இருந்த இந்த காப்பீடு நிறுவனம், வங்கியையும் கையகப்படுத்தியது. மேலும் எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி.(ITC), டாட்டா மோட்டார்ஸ், விப்ரோ, எஸ்.பி.ஐ.(SBI), மாருதி, பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா, எல் & டி(L&T) மற்றும் பல பெரு நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் வாங்கிய பணத்தை முதலீடு செய்துள்ளது.

 

இதன் அதிகபட்ச பங்களிப்பு ஐ.டி.சி. மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஒ.என்.ஜி.சி.(ONGC) நிறுவனங்களில் உள்ளது. வெகு நாட்களாக பங்குச்சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம், தற்போதைய நிலையில் இந்த செயல்பாட்டை தாமதப்படுத்தியுள்ளது.

 

மத்திய அரசும் இதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டு தான் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ரிஸ்க் எடுக்கா விட்டாலும், இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் காப்பீடாக பெற்ற பணத்தை கொண்டு சந்தையில் தனது முதலீட்டை பரவலாக்கி உள்ளது. நடப்பு ஆண்டில் எல்.ஐ.சி. பங்குச்சந்தையில் கண்ட லாபம்(Equity Profit) ரூ. 13,000 கோடி. இது கடந்த வருடம் 23,000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் பேசிய எல்.ஐ.சி. சேர்மன் திரு. குமார் அவர்கள், ‘ பங்குச்சந்தைக்கு வருவதற்கான திட்டம்(Initial Public Offer – IPO) தற்போது முடிவெடுக்கப்படவில்லை. பொருளாதார மந்த நிலையிலும், காப்பீடு தொழில் வளர்ச்சியில் தான் உள்ளது. எல்.ஐ.சி. யின் மியூச்சுவல் பண்டு தொழிலிலும் நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது ‘ என்றார்.

 

வருங்காலத்தில் எல்.ஐ.சி. கிளைகளை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையெனவும், ஏற்கனவே இருக்கும் சிறு கிளைகளை ஐ.டி.பி.ஐ. வங்கி கிளைகளுடன் இணைக்கும் செயல்பாடு நடைபெற்று கொண்டிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது. 

 

எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு தற்போதைய கடனாக(Debt) ரூ. 2.72 லட்சம் கோடி உள்ளது. இந்த வங்கி கடந்த 10 காலாண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. மொத்த வாரக்கடனும்(Gross NPA) மிக அதிகமாக 30 சதவீதத்திற்கு அருகாமையில் உள்ளது. 

 

நிகர வாராக்கடன் 8 சதவீதம் என்ற அளவிலும், இந்த பங்கு கடந்த ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 50 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.