இந்திய வங்கிகள் நலம் தானா ?

இந்திய வங்கிகள் நலம் தானா ? 

Are Banks in India good ? Financial Crisis & Non Performing Assets

ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தில் பிரச்சனை ஆரம்பித்து தற்போது பி.எம்.சி. வங்கி (PMC Bank) வரை நிதி சிக்கலை மட்டுமே கொண்டு நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன. இந்த சிக்கல் களையப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியுமா என்பது அனைவருடைய கேள்வியாக உள்ளது.

பொதுவாக ஒரு நாட்டில் வங்கித்துறை என்பது மக்களின் அசைய முடியாத நம்பிக்கையை கொண்டிருப்பதாகும். பொதுத்துறையை சேர்ந்த ஒரு உற்பத்தி அல்லது சேவை நிறுவனம் திவால் நிலைக்கு சென்றாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சாமானியர்கள் வங்கிகள் மூடப்படும் நிலையை ஒருபோதும் நினைத்து பார்ப்பதில்லை.

அவ்வாறாக ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையும் வங்கியின் மீது உள்ளது. அதே வேளையில் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலையில், இந்த நிலைமை பலரின் நம்பிக்கையை குலைப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகள் (PSU Banks)  மட்டுமில்லாமல், தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின்(NBFC) வாராக்கடன் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ரூ. 4500 கோடி முறைகேடு என சொல்லப்பட்ட பி.எம்.சி. வங்கியில் பெரும்பாலும் அதன் வங்கி வாடிக்கையாளர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி, முறைகேடு உள்ள வங்கிகளின் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாய் மட்டுமே மாதந்தோறும் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. பின்பு இந்த விதி 10,000 மட்டுமே எனவும், அதற்கு பிறகு இதனை அதிகரித்து தற்போது மாதம் ரூ. 25,000 வரை தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையளவில் வங்கி சேவை என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. பண மதிப்பிழப்பு(Demonetization) நடவடிக்கைக்கு பிறகு, வங்கி கணக்கு மற்றும் அதன் சேவை என்பது மறைமுகமாக ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலானோர் வங்கி சேவையை நம்பியிருக்கும் சூழ்நிலையில் வங்கிகளில் நடைபெறும் முறைகேடுக்கு வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவது மறுப்பதற்கில்லை.

வங்கி டெபாசிட்தாரர்களுக்கு பாரத ரிசர்வ் வங்கி முன்னுரிமை அளித்து வருவதாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். வங்கி பண பரிவர்த்தனையில் செயலிழப்பு ஏற்படும் போது, அதற்கு வங்கி சேவை காரணமாக இருக்கும் நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதெல்லாம் செய்திகளாக இருப்பினும், உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு பயனை தருமா என்பது சந்தேகமே. டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிப்பு என சொல்லப்பட்டாலும், அதன் பாதுகாப்பு நம் நாட்டில் உறுதி செய்யப்படவில்லை.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி(SBI) சேவையில் இணைய பரிவர்த்தனையின் போது, வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலும் பரிவர்த்தனை முடியாமல் வங்கி கணக்கில் பணம் மட்டும் பற்று வைக்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர் ஒருவர் மீண்டும் அந்த பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நிலைக்கு நேரம் மற்றும் பணத்தை ஒதுக்க வேண்டும்.

பிடிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. அப்படியிருக்கும் நிலையில், வங்கிகளிடம் இருந்து இழப்பீட்டு தொகை அவ்வளவு விரைவாக கிடைத்திடுமா என்பது கருத்துரையை பொறுத்தே உள்ளது. வாராக்கடன்களை தனியார் வங்கிகள் சில, அந்த தொகை இனி கிடைக்கப்பெறாது என நஷ்டத்தில் கணக்கை முடித்து கொண்டன. இதே பாணியில் தற்போது பொதுத்துறை வங்கிகளிலும் பணம் வராது என கணக்கு எழுதி கொண்டிருக்கின்றன.

கடந்த நான்கு வருடங்களில் இந்திய வங்கிகள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான வாராக்கடன் தொகை இனி வராது என கணக்கை முடித்து கொண்டன. இவற்றில் அதிகமான தொகையை கணக்கில் முடித்து கொண்டது பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. வங்கி மட்டும் ரூ. 76,600 கோடி அளவில் வாராக்கடன் வராது என முடித்து கொண்டுள்ளன. 100 கோடி ரூபாய்க்கு மேலாக கடன் பெற்றவர்களில் 220 நபர்கள் திவாலாகி உள்ளனர்.

மோசமான கடன்களின்(Bad Loans) எண்ணிக்கையையும், அதற்கான தொகையும் வங்கிகள் குறைத்த வண்ணம் உள்ளன. வங்கிகள் இனி புதிய கடன்களுக்கு தயாராக உள்ளன. அரசும் அதற்கான தொகையை தயார் செய்த வண்ணம் உள்ளன. இனியாவது இது போன்ற பிரச்சனை அதிகப்படியாக நடைபெறாமல் இருக்க வேண்டும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் சேவை நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.