தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் – ஜூலை 31
Deadline for Filing Income Tax Returns – July 31, 2019
பட்ஜெட் 2019ம் ஆண்டு தாக்கலும் நடப்பு மாதத்தில் முடிந்தாகி விட்டது. வருமான வரி சார்ந்து சொல்லப்பட்ட விஷயங்கள் அடுத்த 2020-21ம் மதிப்பீட்டு ஆண்டில் செய்ய வேண்டியது(வரி தாக்கல்) என்பதை நினைவில் கொள்ளவும். கடந்த 2018-19ம் நிதியாண்டின் வருமானத்துக்கான வரி தாக்கல் நடப்பு 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் செய்ய வேண்டியவை.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தனிநபர், இந்து கூட்டு குடும்பம்(HUF), சங்கம்(Association of persons) மற்றும் தனிநபர் அடங்கிய அமைப்பு ஆகியோர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் ஜூலை 31ம் தேதியாகும். கணக்குகள் தணிக்கைக்கு உட்படாத தனிநபர்கள் மட்டுமே ஜூலை 31ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்ய வேண்டும். தணிக்கைக்கு உட்பட்ட(Audited) தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2019.
வருமான வரி தாக்கல் இணையதள தகவலின் படி, ஜூன் மாதம் வரை பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை 8.56 கோடி. வருமான வரி துறையின் மூலம் அளிக்கப்பட்ட சேவையால் 45 சதவீத வரி தாக்கல் நடைபெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநில வாரியாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 4.17 லட்சம் பேர் தமிழகம் சார்பாக தாக்கல்(Filing Returns) செய்துள்ளனர்.
Income Tax Returns (Filing) – Plan & Benefits
அதிகபட்சமாக வரி தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்கள் முன்னணியில் உள்ளது. வருமான வரி தாக்கல் சேவையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்ட பிறகு, வரி தாக்கல் படிவங்கள் கடினமாக இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. இதனை வருமான வரி துறை முற்றிலும் மறுத்துள்ளது.
மென்பொருள் மேம்படுத்தப்பட்ட பின், அனைத்து வரி படிவங்களும் எளிமையாக இருப்பதாகவும், அது சார்ந்து பயனர்களின் கருத்துக்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக வருமான வரி துறை கூறியுள்ளது. நடப்பு மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய இயலாதவர்கள், காலக்கெடுவை கடந்தும் வரி தாக்கல் செய்யலாம். இதனை காலங்கடந்த அல்லது தாமதமான வரி தாக்கல்(Belated Returns – ITR) என்பர்.
தாமதமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31,2020. காலங்கடந்த வரி தாக்கல், அதாவது ஜூலை 31ம் தேதிக்கு பின்பு, ஆனால் மார்ச் 31, 2020க்குள் வரி தாக்கல் செய்பவருக்கு அபராத கட்டணமாக ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை விதிக்கப்படும். ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் காலங்கடந்த வரி தாக்கலை செய்யும் பட்சத்தில், அதிகபட்சமாக ரூ. 1,000 வரை அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.
வருமான வரி தாக்கலை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் போது, அபராத கட்டணத்தை தவிர்க்கலாம். அதே வேளையில் வருமான வரி சலுகையை பெறும் பொருட்டு, கடைசி நேர காப்பீடு மற்றும் முதலீட்டை மேற்கொள்வது நல்லதல்ல. ஒரு நிதியாண்டின் துவக்கத்திலேயே நமக்கான நிதி இலக்குகளை(Financial Goals) அறிந்து, திட்டமிட்டு முதலீட்டை மேற்கொள்வது சிறந்தது. வரி சலுகைக்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை