மழைக்காலத்திற்கு தயாராக உள்ளீர்களா ? அவசர கால நிதிக்கான திட்டமிடல்
Ready for the Rainy season ? – Plan for the Emergency Funding
இன்னும் பங்குனி-சித்திரை மாதங்களை தாண்டவில்லை, அதற்குள் மழைக்காலம் என்கிறீர்களா ? மழைக்காலமோ, அது வெயில் காலமோ அதற்கான பாதுகாப்பு அம்சங்களை நாம் முன்னரே திட்டமிடுவது சிறந்தது. ‘வருமுன் காப்போம்’ என்ற வாசகமே நாம் எந்த பிரச்சனைக்குள்ளும் சிக்காமல் நம் தினசரி வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்து கொடுக்கிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தற்போதுள்ள வெயில் காலத்தில் நாம் நம்மை பாதுகாக்க என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரிந்திருக்கும். அது போல மழைக்காலத்தில் மிகவும் அடிப்படை விஷயமாக, வெளியில் செல்லும் போது குடை கொண்டு செல்வது நம் அனைவரது அவசியமாகும். காலத்திற்கு தகுந்தாற் போல், நாம் மாறிக்கொண்டு வந்தாலும், நமது நீண்டகால நிதி வாழ்க்கைக்கு பாதுகாப்பு கவசங்களை அணிகிறோமா என்பது தான் நமக்கான இன்றைய கேள்வி.
வளரும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி கொண்டு தான் இருக்கின்றன. படித்த படிப்புக்கு வேலையில்லை என்று சொன்னாலும், இன்று சேவை துறையில் அதிக வேலைவாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன என்றே சொல்லலாம். பத்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த வேலை தான், இன்று அது போல இல்லை எனலாம். பொதுவாக நுகர்வோர்(Consumer) சார்ந்த தொழில்கள் வளர்ந்து வரும் தருணத்தில், அதனை தொடர்ந்து வேலைவாய்ப்புகளும் பெருகும். நினைவிருக்கட்டும், இந்த வேலைவாய்ப்புகள் அரசாங்கம் ஏற்படுத்தியவை அல்ல, நாம் தான் – நமது நுகர்வு கலாச்சாரம் தான் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
வேலைவாய்ப்புகள் அதிகரித்து வந்தாலும் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பணி மாறுபவர்களின் எண்ணிக்கையும், சில காரணங்களால் வேலையினை இழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்து வருகிறது. நிறுவன பணி மாறுதலோ அல்லது வேலை இழப்போ, இது போன்ற இடைக்கால நிகழ்வுகளை சமாளிப்பது தான் நமக்கான மழைக்கால குடை எனலாம். இது ஒரு தற்காலிக நிகழ்வு தான் எனினும், அதனை சமயத்தில் நாம் தீர்வு கண்டால் மட்டுமே, நமக்கான அடுத்தகட்ட வாழ்க்கை சரியாக அமையப்பெறும்.
இன்றைய சூழ்நிலையில் நாம் தற்காலிகமாக வேலைக்கு செல்ல முடியாமல் போவதற்கான காரணங்கள் பல உண்டு. இருப்பினும், அந்த சமயத்தில் நமக்கான பொருளாதார வாழ்க்கையும் பாதிக்கப்படும். இதனை களைய தான் அவசர கால நிதி திட்டமிடல் அவசியம்(Emergency Fund). எதிர்பாராத பொருளாதார இழப்பு அல்லது தற்காலிக நிதி நெருக்கடியின் போது, அவசர கால சேமிப்பு உங்களுக்கு உதவக்கூடும்.
அவசர கால நிதியை திட்டமிடுவது எப்படி ?
- உங்கள் மாதாந்திர வரவு மற்றும் செலவை கணக்கிட்டு கொள்ளுங்கள் (Monthly Income and Expenses).
- உங்களுக்கு தற்சமயம் உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்களை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (Asset and Liabilities). உங்களால் சொத்து மற்றும் கடன் விவரங்களை கணக்கிட கடினமாக இருந்தால், கவலையடைய வேண்டாம். விட்டு விடுங்கள், நமக்கான இலக்கு அவசரகால நிதியை செயல்படுத்துவது தான்.
- உங்களது அவசரகால இலக்கை திட்டமிடுங்கள் மற்றும் இலக்கிற்கு எவ்வளவு தொகை வேண்டுமென்று குறித்து கொள்ளுங்கள். (Emergency – Due to Job Loss, Unexpected Incident, Medical Emergencies, Family Commitments, Desired Goals)
- பொதுவாக அவசர கால தேவைக்கு 6 முதல் 12 மாத வருமானம் உள்ள தொகையை இலக்காக எடுத்து கொள்வது நன்று.
- உங்களது இலக்கிற்கான சேமிப்பு / முதலீட்டு தொகையை ஒரு வங்கி சேமிப்பு கணக்கின் மூலம் தொடங்குங்கள். வட்டி வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை; நீங்கள் சேமிப்பு கணக்கில், எப்போதும், எங்கு வேண்டுமானாலும் பணத்தை எளிதாக எடுத்து கொள்ளலாம். (Save Only in Savings Accounts/Recurring Deposits. It will give only around 4-7 % Interest, but, you can take money anytime, anywhere. Don’t look out for the Equity, Gold or Real Estate for Emergency !)
- உங்களது அவசரகால நிதியை எக்காரணத்திற்காகவும் வெளியே எடுக்காதீர்கள் (அவசரகாலம் தவிர !)
அவசர கால நிதியை திட்டமிடுவது எவ்வாறு என்பதை நாம் பார்த்து விட்டோம். அடுத்து அதனை செயல்படுத்துவது எவ்வாறு என்பதை கீழ்க்காணும் இணையப்பக்கத்தில் நாம் ஏற்கனவே கொடுத்துள்ளோம்.
அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ? How to Start an Emergency Fund
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை