சேனல்களை தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு
The deadline for selection of TV Channels is extended to January 31, 2019
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI – Telecom Regulatory Authority of India) ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான புதிய கட்டமைப்பு முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. டி.டி.ஹெச் (DTH) ஆபரேட்டர்கள் மற்றும் பிற ஒளிபரப்பாளர்கள் புதிய நடைமுறையை பின்பற்றுமாறும், சந்தாதாரர்களின் விருப்பங்களை கொண்டு அவர்களே சேனல்களை தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தும் படி டிராய் தனது அறிக்கையில் கூறியிருந்தது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சந்தாதாரர்கள் (Subscribers) தாங்களே கேபிள் டிவி சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 28ம் தேதியாக அறிவித்தது டிராய். அதன் பின்னர் புதிய கட்டமைப்பின் கீழ் அனைத்து சேனல்களும் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது. தற்போது இந்த அறிவிப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, சந்தாதாரர்கள் சேனல்களை தேர்வு செய்வதற்கான கடைசி தேதியை வரும் ஜனவரி 31, 2019 ஆக வெளியிட்டுள்ளது.
புதிய முறையின் கீழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் தங்களின் ஒவ்வொரு சேனல்களுக்கான சில்லறை விலையை அறிவிக்க வேண்டுமெனவும், வாடிக்கையாளர்களை (சந்தாதாரர்கள்) அனைத்து சேனல்களையும் பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சந்தாதாரர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அடிப்படை திட்டத்திற்கு ரூ. 130 உடன் ஜி.எஸ்.டி. (18% GST) கட்டணம் உட்பட மாதம் ரூ. 153 /- செலுத்த வேண்டும். இந்த அடிப்படை திட்டத்தில் 26 தூர்தர்சன்(Doordarshan) சேனல்களும், 500 பொது சேனல்களிலிருந்து 100 இலவச சேனல்களும் வழங்கப்படும். அதற்கு பிறகான சேனல் தேர்வுகளுக்கு சந்தாதார்கள் பணம் (Pay TV Channel) செலுத்த வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமில்லாத சேனல்களை தவிர்க்கலாம்.
புதிய கட்டமைப்பு முறையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டண சேனல்களும், அதன் விலைப்பட்டியலும் கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது.
Tariff (Rates) under New Regulatory Framework (2018)
FAQs on New Regulatory Framework for Broadcasting and Cable TV Services
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை