கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் பாம்பே டையிங் உள்ளிட்ட 37 நிறுவனங்கள் – மும்பை பங்குச்சந்தை
37 Stocks under Additional Surveillance Measure (ASM) Frame work – BSE India
மும்பை பங்குச்சந்தை கடந்த மே மாதம் 31 ம் தேதி வெளியிட்ட ஒரு அறிக்கையில் சந்தையில் பட்டியலிடப்பட்ட 37 நிறுவனங்களை தனது கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின்(ASM) கீழ் கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவன பட்டியலில் பாம்பே டையிங்(Bombay Dyeing) நிறுவனமும் உள்ளடக்கம்.
கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில்(ASM Framework) சேர்க்கப்பட்ட நிறுவனங்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும் என மும்பை பங்குச்சந்தை -BSE India தெரிவித்துள்ளது.
சந்தை பங்கேற்பாளர்களும் தெரியும் வண்ணம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது எனவும், அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களும் அனைத்து முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மும்பை பங்குச்சந்தை இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.
அதே சமயத்தில் இந்த கூடுதல் கண்காணிப்பில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் மட்டுமே உள்ளது எனவும், இதன் காரணமாக நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாக கருத கூடாது எனவும் மும்பை பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
37 நிறுவனங்கள் பட்டியலில் உள்ள சில நிறுவனங்கள் – கிராஃபைட் இந்தியா (Graphite India), ஜி.வி.கே. பவர் (GVK Power and Infra), ரெயின் இண்டஸ்ட்ரீஸ்(Rain Industries), ரேடிக்கோ கைத்தான்(Radico Khaitan).
நிறுவனங்களின் பட்டியலை அறிய / பதிவிறக்கம் செய்ய…
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை