பொது பட்ஜெட் 2018 – Budget India 2018 Highlights
பொது பட்ஜெட் 2018, பாரத பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi)ஆட்சியின் கடைசி பட்ஜெட் இன்று (01.02.2018) நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ (Arun Jaitley) அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அருண் ஜெட்லீ அவர்களின் தொடர்ச்சியான 5வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் விவசாயம், தொழில் மற்றும் சுகாதாரம் – மருத்துவம் சார்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது பட்ஜெட்டின் சில துளிகள் (Budget 2018 Highlights):
- விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக (Agriculture and Farmers), உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்கவும், இடைத்தரகர்களை நீக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- வேளாண் சந்தைகள் அமைப்பதற்கு ரூ. 2000 கோடி மற்றும் விவசாய உள்கட்டமைப்பிற்கு ரூ.22,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
- விவசாய பயிர் கடன் இலக்காக ரூ. 11 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விவசாய கழிவுகள் எரிக்கப்படாமல் பயன்படுத்த புதிய திட்டம் அமைக்கப்படும்.
- வேளாண் உற்பத்தி நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் 100 சதவிகித வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- தனி நபர் வருமான வரம்பில் மாற்றம் ஏதுமில்லை(Income Tax exemption). அது சம்மந்தமான சலுகைகள் இல்லை. தனி நபர் வருமான வரி வருவாயும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தனி நபர் வருமானத்தில்(மாத வருமானம்) உள்ளவர்கள் அவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளுக்காக ரூ.40,000 /- வரை வருமான வரிச்சலுகை பெறலாம். அதுவே மூத்த குடிமக்களுக்கு ரூ. 50,000 /- வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
- மூத்த குடிமக்களுக்கு: வங்கி வைப்புத்தொகை மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு ரூ. 50,000 /- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காப்பீடு திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதிய திட்டத்திலும் வட்டி வருமானத்திற்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
- பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் பரஸ்பர நிதி வருவாய்க்கு 10 % வரி விதிக்கப்பட்டுள்ளது. பங்குகளில் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு (ரூ. 1 லட்சத்திற்கு மேல்) 10 % ஆதாய வரி விதிக்கப்பட்டுள்ளது. (Long term Capital Gains – Tax @ 10%)
- நேரடி வரி விகித வளர்ச்சி – ஜனவரி 15, 2018 வரை 18.7 % ஆக உள்ளது.
- ரயில்வே துறைக்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வதோதராவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைத்தல் மற்றும் தண்டவாளங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படும்.
- ஜவுளி துறைக்கு ரூ. 7,148 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த துறைக்கு மேலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- 51 லட்சம் புதிய வீடுகள், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு மற்றும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையில் மருத்துவ செலவு வழங்கப்படும்.
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 கோடி கழிப்பறைகள் இன்னும் ஒரு வருடத்தில் கட்டப்படும்.
- 5 லட்சம் மருத்துவ மையங்கள் மற்றும் 24 மருத்துவ கல்லூரிகள் நாடு முழுவதும் அமைக்கப்படும்.
- மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75,000 கோடி வரை கடன் வழங்க இலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் 8 கோடி ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாயு மற்றும் 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு அளிக்கப்படும்.
- “Operation Green “ என்ற புதிய திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்படும். முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறுதொழில் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்காக தொழில் கடனுதவி திட்டங்கள் அமலில் உள்ளன.
- வருங்கால வைப்பு நிதிக்கு பெண்கள் வேலைக்கு சேர்ந்த முதல் 3 ஆண்டுகள், தங்களின் வருமானத்தில் 8 சதவிகிதம் மட்டும் செலுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது.
- கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவிகிதம் குறைக்கப்படும்.
- நேர்மையாக வரி செலுத்தும் நபர்களுக்கு விருதும், பரிசும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடப்பு நிதி பற்றாக்குறை (Fiscal Deficit) GDP ல் 3.5 % ஆக உள்ளது.
பட்ஜெட் 2018 சம்மந்தமான உங்கள் கருத்துக்கள் மற்றும் தகவல்களை பகிரலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை