வீட்டுக்கடன்: கவனிக்க வேண்டிய நான்கு [4] விஷயங்கள்:
4 Things to know about Housing Loan:
பொதுவாக, நாம் வீட்டுக்கடன் வாங்க வங்கியிடம் செல்லும் போது, வட்டி விகிதம் மற்றும் கால அளவை மட்டுமே கருத்தில் கொள்கிறோம். இது போக நாம் சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- உங்கள் தகுதியை அறியுங்கள் (Know your Eligibility):
- வீட்டுக்கடன் வாங்க செல்லும் முன், உங்கள் வருமானம் மற்றும் முந்தைய கடன் எவ்வளவு இருக்கிறது என்பதை குறித்து கொள்ளுங்கள்.
- நீங்கள் வாங்க போகும் சொத்து / கடன் எவ்வளவு மதிப்பு என்பதையும் அறியுங்கள்.
- உங்கள் கடனுக்கான சிபில் ஸ்கோரையும் (CIBIL Score) அறிந்து வைத்திருப்பது நல்லது.
2. உங்கள் கடன் கட்டும் கால அளவை அறியுங்கள் (Know your Loan Tenure):
- பெரும்பாலும், நாம் வீட்டுக்கடன் வாங்கிய பிறகு அதனை திரும்ப செலுத்தும் காலம் 15 முதல் 20 வருடங்களாக இருக்கலாம். அதனால் நமது மற்ற அடிப்படை தேவைகளுக்கு கவனம் கொள்ள வேண்டும்.
- நாம் நீண்ட கால நோக்கில் கடனை திரும்பி செலுத்துவதால், நமக்கு சௌகரியமான மற்றும் சிறந்த கடனை வழங்கும் வங்கியை தேர்ந்தெடுக்கலாம்.
- தவணை முறையில் கட்டுவதில் உள்ள தன்மை, நாம் வருடத்திற்கு ஒரு முறை தவணை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது நமது கால அளவும் குறையும். இதன் மூலம் நாம் விரைவாக கடனையும் அடைக்கலாம்.
-
வீட்டுக்கடனை திரும்ப செலுத்தும் போது, உங்கள் வீட்டுக்கான வரி செலவு, பராமரிப்பு செலவு மற்றும் இதர கூடுதல் செலவுகள் ஏதேனும் இருந்தாலும் அவற்றையும் உங்கள் கடனுடன் கணக்கிட்டு கொள்ளவும்.
3. வட்டி விகிதத்தை அறியுங்கள் (Know your Interest Rate %):
-
வீட்டுக்கடன் வாங்கும் போது, வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். பெரும்பாலும் அதன் வித்தியாசம் 0.1 – 0.25 – 0.50 % ஆக இருக்கலாம்.
-
நமது கடன் நீண்ட கால என்பதால், நாம் வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதத்திலே கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை; மாறாக, நாம் வங்கி அதிகாரிகளிடம் நமது தேவைகளை பேசி, வட்டி விகிதத்தை குறைக்கவும் செய்யலாம்.
-
வட்டி விகித மாறுபாட்டை சில வங்கிகளில் விசாரித்த பிறகு, கடன் பெறுவதற்கான வங்கியை தேர்ந்தெடுக்கலாம்.
-
ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் வங்கிகளுக்கு ஏதேனும் சலுகை அறிவித்தாலும், அதனையும் நாம் கருத்தில் கொண்டு வங்கிகளிடம் நாம் பெறும் கடனுக்கான வட்டியை குறைக்கலாம்.
4. காப்பீடும், வரி சலுகையும் (Benefits of Insurance and Taxes):
-
நமது வீட்டுக்கடனுக்கான தொகைக்கு வரிச்சலுகை எவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
-
வீட்டுக்கான காப்பீடு பெற்றுள்ளோமா என்பதனையும் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
-
கடைசியாக: நாம் பெற போகும் ஒவ்வொரு கடனுக்கும், நமது தேவைகளை அறிந்து, அதற்கு மேல் எந்த அவசரமும் இல்லாமல் நாம் வங்கிகளையோ, முகவர்களையோ (அ) ஆலோசகரையோ நாட வேண்டும்.—-உங்களுடைய பகிர்வுகளுக்கு:– நன்றி, வர்த்தக மதுரை