நமக்கு கடந்த சில நாட்களாக, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து,
“Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (Rs.330 p.a) & Pradhan Mantri
Suraksha Bima Yojana (Rs.12 p.a) – 2.0 Lacs” என்ற குறுந்தகவல் நமக்கு
கைபேசியில் கிடைத்திருக்கும். இந்த இரண்டு காப்பீட்டு திட்டம் பற்றி
நமக்கு தெரியுமோ (அ) தெரியவில்லையோ, ஆனால் அத்திட்டத்தின் மீது நமக்கு
ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கும். காரணம், இரண்டு லட்சம் காப்பீடு இந்த
விலையிலா…! ?
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana – Life Insurance
- இது ஒரு ஆயுள் காப்பீடு, பொதுவாக அடிப்படை Risk Coverage (Normal Risk) உள்ளது.
- அதிகபட்ச காப்பீடு அளவு: ரூ. 2,00,000 /- (2 லட்சம்) – இறப்பு ஏற்பட்டால்.
- நுழைவு வயது: 18 – 50 (Age)
- பிரீமியம் தொகை: ரூ. 330 /- (ஒரு வருடத்திற்கு)
- குறிப்பு:
- இந்த காப்பீடு இந்திய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டு, Life Insurance
Corporation(LIC) மூலம் நடத்தப்படுகிறது. - பிற காப்பீடு நிறுவனங்களும், இந்த திட்டத்தில் தங்களை இணைத்து கொள்ளலாம்.
- ஆதார் அட்டையினை வங்கியுடன் இணைத்தவர்களாக இருக்க வேண்டும்; பிரீமியம்
தொகை, ஒவ்வொரு வருடமும் உங்கள் வங்கி கணக்கிலிருந்து எடுத்து
கொள்ளப்படும். - மற்ற Term Insurance திட்டத்தை காட்டிலும், இதன் பிரீமியம் தொகை மிக
குறைவு மற்றும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை. - இந்த திட்டத்தினை உங்கள் வங்கியின் மூலமோ (அ) LIC யிலோ பெறலாம்.
- வருமான வரிச்சட்டம் 80 C ன் கீழ் வரி சலுகை உண்டு.
இந்த திட்டத்தினை பற்றிய சந்தேகங்களுக்கு, மின்னஞ்சல் அனுப்ப:
varthagamadurai@sidzz.com
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும்
உறவினர்களுக்கு, Share செய்து கொள்ளலாம்.
நன்றி – வர்த்தக மதுரை