Tag Archives: retire early

நிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா ? உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள்

நிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா  ? உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள்

The Eight Strategies to get Financial Freedom fast

 

இன்றைய நவீனத்துவ உலகில் பொருளாதார வாழ்க்கை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. பணம் நமக்கு அதிகம் தேவையில்லை என்று சொன்னாலும், தொழில் வளர்ச்சியும், அதனை சார்ந்த தேவைகளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதனால் தான், ‘ சிறு துளி பெருவெள்ளம் ‘ என்ற வாசகம் இன்றும் பிரகாசமாகவே உள்ளது.

 

எளிய முறை வாழ்க்கையோ அல்லது நாம் விரும்பிய வாழ்க்கை முறையோ, எதுவென்றாலும் நாம் பொருளாதாரத்தை சார்ந்தே உள்ளோம். அப்படி இருக்கும் போது, பொருளாதார தேவைக்காக நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையையே அடமானம் வைக்கின்றனர். பணம் தேவை தான், அதற்காக வாழ்நாள் முழுவதும் பணத்தின் பின்னால் செல்வதில் என்ன மகிழ்ச்சி உள்ளது ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தை சந்தோசமாக செலவழிப்பதற்கான காலம் இருந்தால் மட்டுமே, நாம் சேர்த்த பணத்திற்கான பயன் உண்டு. தொழில்நுட்பம் மேம்பட்டு கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்மில் சிலர் இளமை காலத்தில் ஓய்வு பெறுவது பற்றியும் (Early Retirement Plan), பொருளாதார சுதந்திரத்தை அடைய முயற்சிப்பதும்(Financial Freedom) நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான சாத்தியம் குறைவு தான் என்று சொல்ல வந்தாலும், இது போன்ற சிந்தனைகள் ஒரு ஆரோக்கியமான விஷயமே.

 

ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) வேண்டாம் என்று சொன்னவர்கள் எல்லாம், இன்று தங்களது தேவைக்கு அதனையே சார்ந்துள்ளனர். இதனை போன்றே நிதி சுதந்திரம் பெறுவதும் ஒரு தேவையே. நிதி சுதந்திரம் அல்லது பொருளாதார சுதந்திரம்(Financially Free) என்பது நாம் நமக்கான தேவைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்காமல், அதற்கான போதுமான செல்வத்தை முன்கூட்டியே சேர்த்து வைத்து கொள்வது. இதன் மூலம் நாம் நமது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்படலாம்.

 

நிதி சுதந்திரத்தை பெற இன்று பல தகவல்கள் இணையத்தில் கிடைத்தாலும், வெற்றி பெற்றவர்கள் சிலரின் அனுபவங்கள், தோல்விகள் ஆகியவை நம்மை எளிதாக நிதி சுதந்திரம் பெற துணைபுரியும். அப்படியான ஒரு நபரின் சந்திப்பையும், அவரது வார்த்தைகளையும் தான், நான் சில நாட்களுக்கு முன் பெற்றிருந்தேன். கனடா நாட்டை சேர்ந்த ஹார்வ் எக்கர் (Harv Eker) ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர், தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரர். ‘ Secrets of the Millionaire Mind ‘ என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியரும் ஹார்வ் எக்கர் ஆவார். அவரிடம் நான் கற்ற விஷயங்கள் சில,

 

நிதி சுதந்திரத்தை விரைவாக பெறுவதற்கான 8 தாரக மந்திரங்கள்:

 

  • சுதந்திரமான மனதை அமைத்து கொள்ளுதல்(Freedom Mindset) :

 

உங்கள்  எண்ணங்கள், நம்பிக்கை, வார்த்தைகள் மற்றும் கொள்கைகளில் நீங்கள் சுதந்திரமாக செயல்பட முனையுங்கள். உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது, அதற்கான திட்டம் உங்களிடம் இருக்கும். அதுவே உங்களை முன்னேற்றத்தில் செல்ல துணைபுரியும்.

 

  • இலக்கு மற்றும் திட்டத்தை ஏற்படுத்தி கொள்ளுதல் (Goal and Plan):

 

நீங்கள் பொருளாதார சுதந்திரம் அடைய முடிவெடுத்தவுடன், உங்களுக்கான சரியான இலக்கையும், திட்டத்தையும் ஏற்படுத்துவது அவசியம். உங்களுக்கு என்ன வேண்டும், எங்கே செல்ல விரும்புகிறீர்கள், என்ன மாதிரியான வாழ்க்கை முறையை வாழ விரும்புகிறீர்கள் (What do you want) என்பதை தீர்மானித்து கொள்வது நன்று.

 

பொருளாதார ரீதியாக தேவைப்படும் பணத்தின் மதிப்பையும் குறித்து வைத்து கொள்வது, அடுத்த 10-15 வருடங்களுக்கு எனக்கும், எனது குடும்பத்திற்கும் என்ன தேவை உள்ளது என்பதையும் கணக்கிட்டு கொள்ள வேண்டும். இலக்கு மற்றும் திட்டமில்லாத சுதந்திரம் என்று எதுவும் கிடையாது. நீங்கள் நிதி சுதந்திரம் பெற வேண்டுமானால், இலக்கு மற்றும் திட்டம் என்பதும் அவசியமாகும்.

 

  • சம்பாதிப்பதை விட குறைவாக செலவழியுங்கள் (Spend less than you Earn):

 

தேவையற்ற செலவுகளை குறைத்தல் அல்லது அதனை தவிர்த்தல் என்பது நிதி சுதந்திரத்தின் முக்கிய பண்பாகும். உங்களிடம் என்ன உள்ளதோ, அதன் எல்லைக்குள் உங்கள் பொருளாதாரத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

 

அவசியமற்ற செலவுகளை தவிர்த்தல் என்பதை உங்கள் வாழ்வில் ஒரு பழக்கமாக்கி கொள்வதும், பின்னாளில் அது உங்களை பல சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைய செய்யும்.

 

  • உங்கள் பணத்தை நிர்வகிக்க கற்று கொள்ளுங்கள் (Manage your money):

 

உங்களுக்கு தேவையான மாத அடிப்படை செலவுகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள், உங்களுக்கு பிரியமான இடத்திற்கு செல்ல தேவைப்படும் தொகை ஆகியவற்றை தனித்தனியாக ஒதுக்கீடு (Splitting) செய்ய பழகுங்கள். முடிந்தால் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வங்கி கணக்குகளை ஆரம்பியுங்கள்.

 

ஒவ்வொரு தேவைக்குமான தொகையை முன்னரே எடுத்து வைக்க பழகுங்கள். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் நிதி சிக்கல் இல்லாமல் பொருளாதார சுதந்திரத்தை எளிமையாக அடையலாம்.

 

  • அதிகப்படியான பணம் சம்பாதியுங்கள் (Earn a lot more money):

 

நீங்கள் உங்கள் இளமை காலத்தில் அதிகப்படியான வருமானத்தை பெறும் போது, உங்களுடைய சேமிப்பையும், முதலீட்டையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிதி சுதந்திரம் பெறுவதை விரைவாகவும், எளிமையாகவும் அடையலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பணம் சம்பாதிப்பதின் ரகசியமே (Secret of Earning Money) , நாம் பெறும் வருமானம் எவ்வாறு நமக்கு கிடைக்கிறது என்பதில் தான் உள்ளது. நம்மை சுற்றியுள்ளவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதின் மூலமே நமக்கான வருமானம் கிடைக்கிறது. மக்களுடைய அதிகப்படியான பிரச்னைகளை கண்டறியுங்கள், அதனை தீர்க்க உதவுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வை அளிப்பவராக (Problem Solver) உங்களை மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கான பணம் தானாக வந்து சேரும்.

 

  • மூலதனத்தின் சக்தி வாய்ந்த வாய்ப்புகள் (Investment Appreciation):

 

உங்களின் பணத்தை வெறும் முதலீடாக மட்டுமல்லாமல், முதலீட்டின் மூலம் பெறும் வருமானத்தின் மதிப்பையும் (Value to Increase) உயர்த்த முயலுங்கள். கையில் கிடைத்த லாபத்தை மறுமுதலீடு (Reinvesting) செய்வதால் உங்களுடைய செல்வத்தின் மதிப்பும் உயரும்.

 

பங்குகள் (Stocks), பரஸ்பர நிதிகள் (Mutual Funds), மனை விற்பனை (Real Estate), வாடகை வருமானம் (Rental Income) போன்ற மூலதன பெருக்குதலில் உங்கள் ஆர்வத்தை காட்டுங்கள். நீங்கள் ஒரு சொத்தினை வாங்கும் போது மட்டுமே உங்களுக்கான லாபத்தை பெறுகிறீர்கள், விற்கும் போது அல்ல.

 

  • மிகப்பெரிய செயலற்ற வருமானத்தை உருவாக்குங்கள் (Create Passive Income):

 

உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை அதிகமாக வீணாக்காமல், வருமானத்தை அதிகரிப்பதற்கான கற்றலை மேற்கொள்ளுங்கள். கற்றலின் மூலம் மிகப்பெரிய செயலற்ற வருமானத்தை பெறுங்கள். நீங்கள் இல்லாமல் செயல்படும் ஒரு தொழிலை அல்லது வணிக அமைப்பை (Business System) ஏற்படுத்துங்கள். அந்த தொழில் உங்களுக்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து தரும்.

 

உங்களிடம் உள்ள சேமிப்பு சிறு தொகையாக இருந்தாலும், அதனை ஒரு தொழிலாக மாற்றுங்கள் (Converting liquid cash to Business Opportunity). அவை தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கான மற்றொரு வாய்ப்பை காட்டும்.

 

  • உங்களுடைய பங்களிப்பு அப்போதும் அவசியம் (Helping others):

 

நீங்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவது ஒரு புறம் இருந்தாலும், உங்களுடைய பங்களிப்பை மற்றவர்களுக்கும் அளியுங்கள். ஏழை, எளியவர்களின் கல்விக்கு உதவுவது, உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது, தொழிலில் ஆர்வமுள்ளவர்களை மேம்படுத்த துணைபுரிவது போன்ற செயல்களை எப்போதும் மேற்கொள்ளுங்கள்.

 

‘ என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நான் மற்றவர்களுக்கு உதவுவேன் என்று நீங்கள் கூறினால், உங்களால் வாழ்நாள் முழுவதும் யாருக்கும் நன்மையை செய்ய முடியாது. ‘

 

பணத்தின் ரகசியமே மற்றவர்களுக்கு கொடுப்பதின் மூலம் தான் உள்ளது. உங்களுடைய ஒவ்வொரு உதவியும், உங்களை மேம்படுத்தும்.

 

அறிவே ஆற்றல்(Knowledge is Power). அறிவை நீங்கள் செயல்படுத்தவில்லை என்றால், அதனால் யாருக்கு என்ன பயன் ? செயல்படுத்தப்பட்ட அறிவே பயன்களை விளைவிக்கும். அதனால் தான் இன்று படித்தவர்கள் அதிகம் இருப்பினும், அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. அதற்கு காரணம் கற்ற கல்வியை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான். அதே நேரத்தில் படிப்பறிவு குறைவாக இருந்தாலும், சிலர் தங்களின் செயல்களின் மூலம் பிரமாண்டமான வாழ்க்கையை வாழ்கின்றனர். சமுதாயத்திற்கும் பல நன்மைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

 

நீங்கள் கற்கும் எந்தவொரு கல்வியையும் செயலில் கொண்டுவர பழகுங்கள். பின்பு, அதனை உங்களின் பழக்கமாக்கி கொள்ளுங்கள். வெற்றி உங்களின் பாதத்தில்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

இளமையில் ஓய்வு பெற விரும்புகிறீர்களா ?

இளமையில் ஓய்வு பெற விரும்புகிறீர்களா ?

 

நவீன யுகத்தில், “Workaholic” என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்பட்டாலும் வேலைப்பளு, வேலை திருப்தியின்மை என்பது ஒரு பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது.

 

அது என்ன ‘ Workaholic ‘ ?

 

WorkaholicPerson with a compulsive need to work ; Workaholism is a compulsive about working.

 

வேலை செய்ய வேண்டிய கட்டாயம் (அ) எப்போதும் வேலை, வேலை என்றிருப்பது.

 

பெரும்பாலோர் விருப்பமில்லாமல் பணிச்சுமையை ஏற்பதற்கு காரணம் – பொருளாதார தேவை. இது இன்றைய அதிக சம்பளம் மற்றும் ஆடம்பரத்துக்கும் பொருந்தும்.  உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகள் மறைந்து, இன்று விருப்பத்தேவை மட்டும் தான் தலை தூக்கி உள்ளது. எனக்கு எது தேவை என்பதை விட, எனக்கு இது வேண்டும் என்ற கொள்கை இன்று வளர்கிறது. நாகரீக மாற்றத்தில் இதுவும் அடங்கும் தானே 🙂

 

கால் காசுனாலும் கவர்ன்மென்ட் வேலை “ என்பதெல்லாம் இன்று பொய்யாகி விட்டது. இன்று எல்லா வேலைகளிலும் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு என்ற விஷயம் இல்லாமையால், சம்பள அதிகரிப்பை மட்டுமே பெரும்பாலோர் எதிர்பார்க்கின்றனர். ஒரு புறம் நிறுவனங்களுக்கு வேலை ஆட்கள் கிடைக்கவில்லை; மறுபுறம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற போதும், தாங்கள் பணிபுரியும் துறையில் நாட்டமின்மை, பணிச்சுமையாக கருதுதல் என்பது வாடிக்கையாகி விட்டது. முன்னொரு காலத்தில் ஒரே துறை அல்லது ஒரே  நிறுவனத்தில் 30 (அ) 40 வருடங்கள் பணிபுரிந்த அனுபவங்கள் இன்று இல்லை. இன்னும் சொல்ல போனால், இன்றைய  தலைமை அதிகாரிகளும் நீண்ட காலம் ஒரு நிறுவனத்தில் நீடிப்பதில்லை. இதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுவது, நாம் நமக்கு பிடித்த  துறையை (அ) கல்வியை தேர்ந்தெடுக்காதது  தான்; பணியில்  சுமை என்று  நாம் பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. தினக்கூலியிலிருந்து, டாட்டா (Tata) வரை எல்லாருக்கும் பணிச்சுமை உள்ளது. அந்த பணிச்சுமை தான் சிலரை மாபெரும் மனிதர்களாக்கி உள்ளது. ஆனால் நவீன யுகம் மீண்டும் தன் நிலைக்கு திரும்புகிறது. இன்றைய தலைமுறையில் பணிச்சுமை என்பதை விட, வேறு ஒரு வார்த்தை புதுமையாக்கப்பட்டுள்ளது – “ இளமையில் ஓய்வு (Retire Early)

 

இளமையில் ஓய்வு:

 

அப்போதெல்லாம் நாங்க 60 வயது வரை உழைத்து ஓய்வு பெற்றோம் “ என்ற வாசகத்தை இனி நாம் கேட்க போவதில்லை. இன்று இளமையில் ஓய்வு (Retire Early) என்ற வார்த்தை தான் போக்காக (Trending) உள்ளது.  இளமையில் ஓய்வு பெறுவதை இருவகையாக பிரித்து பார்க்கலாம்,

 

  • இருக்கும் பணியிலிருந்து இளமையில் ஓய்வு பெற்று புதிதாக தொழில் தொடங்குவது / தொழில்முனைவோராக விரும்புவது. (Become an Entrepreneur )

 

  • இனி எந்த வேலையிலும், தொழிலிலும் ஈடுபட போவதில்லை; வாழ்க்கையை விருப்பம் போல கழிக்க வேண்டும் என விரும்புவது. (Live as Life, Live as like ).

 

Become an Entrepreneur:

 

இருக்கும் பணியிலிருந்து  இளமையில் ஓய்வு பெற்று அல்லது தன்னை விடுவித்து கொண்டு தொழில் முனைவோராக களமிறங்குவது இன்று நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. உண்மையில் இது ஒரு நல்ல விஷயம் தான். “ நல்ல தொழில் செய்ய வேண்டும், நாலு பேருக்கு வேலை தர வேண்டும் “ என்பது ஒரு லட்சிய நோக்கமே. பணம் சம்பாதிக்க தான் தொழில் தொடங்கினாலும், மறைமுகமாக நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் தொழில்முனைவோராக சிறக்க சரியான திட்டமிடல் மற்றும் செயலாற்றல் அவசியம். வெறும் புதுமையான யோசனைகளை மட்டும் வைத்து கொண்டு வெற்றி பெற்று விட முடியாது.

 

Live as Life, Live as like:

 

“ இனி மேல் நான் எந்த வேலைக்கும் செல்வதை விரும்பவில்லை; தொழில் செய்யவும் இல்லை. எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ போகிறேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக வேண்டும்” – இதுவும் இங்கு நடக்கும். சில சமயங்களில் பலருக்கு இந்த வரிகள் உபயோகப்படாமல் போனாலும், சிலருக்கு இது அர்த்தமுள்ளதாகி விடும். இருக்கும் வாழ்க்கையை பிடித்தவாறு உணர வேண்டும், பிறரை நேசிக்க வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை. அப்படியே வாழலாம். இன்று நாம் பார்க்கும் புதுமையான தொண்டுகளும், புவி சார்ந்த நிகழ்வுகளும் அப்படி தான் அமைந்தன.

 

‘ அப்புறம் என்ன பிரச்சனை, தலைப்பை முடித்து விட்டு போக வேண்டியது தானே என்கிறீர்களா  ? ‘   🙂

 

இனிமேல் தானே விஷயம் இருக்கு. இருக்கும் வேலையை விட்டு விட்டு நீங்கள் தொழில்முனைவோரானாலும் சரி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக உருவாக்கினாலும் சரி – வேலையை கடந்தவுடன் தான் நமது வாழ்க்கை ஆரம்பமாகிறது என்பதை மறக்க வேண்டாம். இளமையில் ஓய்வு பெறுவதற்கு ஒரு மன தைரியம் வேண்டும். இளமை கால ஓய்வு என்பது நாம் இனி வாழ போகும் காலம் நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அக்கரைக்கு இக்கரை பச்சையாகி விட கூடாது. அதனால் நமது இளமை கால ஓய்வுக்கான நிதித்திட்டமிடல் அவசியம்.

 

உதாரணத்திற்கு, நாம் 40 வயதில் ஓய்வு பெற விரும்பினால் நாம் அடுத்து எத்தனை வயது (அ) காலம் வரை இருக்க போகிறோம் என்பது முக்கியம். 70 வயது வரை நம்மால் வாழ முடியும் என்ற கணிப்பு (கணிப்பு தான்) இருந்தால், ( 70-40 = 30 ) 30 வருடத்திற்கான  செலவுகளை (அடிப்படை தேவை, மருத்துவம், போக்குவரத்து ) எவ்வாறு  கையாள போகிறோம் என்பது நிபந்தனை. வேலையை துறந்து பின் செயலாற்றல் மிகவும் கடினம். நம்மால் தொழிலில் சிறந்து விளங்க எவ்வளவு காலமாகும், நமது குடும்பத்திற்கான அத்தியாவசிய செலவுகள் என்பவை எல்லாம் கணக்கிடப்பட வேண்டும். இதற்கான தகவல்கள்  நிதி சார்ந்த, காப்பீடு  சம்மந்தமான இணையதளத்தில் Retirement Planning, Retirement Calculator என்ற வசதி உள்ளது. அவற்றை பயன்படுத்தி நமக்கு தேவையான பணத்தை நாம் தயார் செய்து கொள்ளலாம் அல்லது  சொத்துக்களை கையாள வேண்டும். பணவீக்கத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

 

HDFC Life’s Retirement Planning and Pension Calculator

Money Control’s Retirement Calculator

 

பொதுவாக, இந்த Retirement Calculator சரியாக சொன்னாலும், நாம் சற்று கூடுதலான பாதுகாப்பை ஏற்படுத்துவது நலம். ஏனென்றால் நாம் இளமையில் சம்பாதிப்பதை விட, வயதான காலத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு. அதாவது நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது, பயணக்கட்டணத்தை விட சற்று கூடுதலான தொகையை வைத்திருப்போமே, அது போன்று.

 

General Retirement Planning:

 

இந்த முறையில், நமக்கு தேவைப்படும் காரணிகள் – நமது தற்போதைய வயது, ஓய்வு பெறப்போகும் வயது, தற்போதைய ஆண்டு வருமானம், மாத செலவுகள், தற்போதைய  முதலீடு மற்றும் சேமிப்பு இருப்பு, எதிர்காலத்தில் அதற்கு எதிர்பார்க்கும் வருமானம், பணவீக்கம் ஆகியவற்றை நாம் குறித்து வைத்து கொண்டு, நமது இளமை கால நிதித்திட்டமிடலை துவக்கலாம்.

 

( Current Age, Retirement Age, Annual Income, Monthly Expenses, Current Savings and Investing, Expected Return on Investments(ROI), Inflation )

 

Early Retirement Formula (ERF):

 

டக் மஸ்ஸி (Doug Massey) என்ற ஆசிரியர் ஓய்வு கால திட்டத்திற்கான விதியை உருவாக்கியுள்ளார். இவர் தனது 41 வயதில் மற்றவர்களுக்காக வேலை செய்வதிலிருந்தும், தொழில் மற்றும் முதலீட்டில் இருந்தும் தன்னை முழுமையாக விடுவித்து (ஓய்வு) கொண்டார்.

 

ERF =  Your Age X  Networth / Yearly Expenses

 

Maintain the ERF value is > 1000

 

உதாரணத்திற்கு, உங்களுடைய வயது 30 மற்றும் உங்களிடம் இருக்கும் சொத்து (மனை, வீடு, முதலீடு, சேமிப்பு, பணம் கையிருப்பு) ரூ. 2,00,00,000 /- (2 கோடி) மற்றும் ஆண்டு செலவு- ரூ. 6,00,000 /- எனில்,

 

[ 30 X 2 Crores / 6 lakhs ] = 1000  

 

–  ஓய்வு எண் 1000 க்கு குறையாமல் இருப்பது நல்லது.

 

இதை போல, நீங்களும் உங்களுடைய இளமை கால ஓய்வு எண்ணை கணக்கிடலாம். அவர் இந்த விதியில் பரிந்துரைப்பது கூடுதலான தொகையை சேர்க்க வேண்டும் என்பது தான்.

 

இளமையில் ஓய்வு பெறுவதும் ஒரு சாமர்த்தியமான இலக்கு தான்; இலக்கை சரியாக திட்டமிடுங்கள்.

 

இளமையில் வெல்லுங்கள் !

 

வாழ்க வளமுடன், வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com