Tag Archives: aadhaar linking

மீண்டும் ஒரு குழப்பத்தில் ஆதார் எண் இணைப்பு

மீண்டும் ஒரு குழப்பத்தில் ஆதார் எண் இணைப்பு

The Chaos on Aadhaar linking has been resumed

கடந்த செப்டம்பர்  26, 2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்று, ஆதார் எண் சம்மந்தமான தீர்ப்பை வெளியிட்டது. எல்லாவற்றிற்கும் ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், அரசு சார்பில் அளிக்கப்படும் சேவைகளுக்கு வேண்டுமானால் ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தலாம் எனவும் தீர்ப்பை வழங்கியது.

 

அந்த தீர்ப்பின் படி, அரசு சார்பில் அளிக்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தலாம். அது போக, பான் எண் (Permanent Account Number -PAN) பெறுவதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும் (Income Tax Return -ITR) கட்டாயமாகும்.

 

அதே நேரத்தில், மொபைல் எண்ணுடன் (Mobile Number), வங்கி கணக்கு ஆரம்பிப்பதற்கு, புதிய வாகனங்கள் பதிவு செய்வதற்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குழுந்தைகளுக்கான சலுகைகளை பெறுவதற்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், பள்ளி சேர்க்கை மற்றும் கல்வி பொது தேர்வுகளுக்கு ஆதார் எண் அவசியமில்லை எனவும் கூறியுள்ளது.

 

மேலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வாடிக்கையாளருக்கு அளிப்பதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது. இதன் மூலம் இனி வங்கிகள், இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட ஆகிய சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண் அவசியமில்லை.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (06-10-2018) அன்று நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லீ தெரிவித்த கருத்தொன்று மீண்டும் ஆதார் சம்மந்தமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், ‘ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குகளுக்கு ஆதார் எண் இணைப்பை ஏற்படுத்தினால் அதன் மூலம் பெறும் தகவல்கள் பயனுள்ளதாக அமையும். உச்ச நீதிமன்றம் ஆதார் சட்டம் – பிரிவு 57 ன் (Aadhaar act – Section 57)  கீழ் உள்ள அறிவுறுத்தல்களை தான் நீக்கியுள்ளது ‘ என்றார்.

 

ஆதார் சட்டம் – பிரிவு 57 ல் தனியார் நிறுவனங்களுடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இந்த பிரிவை தான் உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளதாக கூறும் நிதி அமைச்சர் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆதார் எண் இணைப்பை பயன்படுத்துவது பலனளிக்கும் என்பது மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது சம்மந்தமான அடுத்த நடவடிக்கைகளை பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

பான் மற்றும் நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு – ஜூன் 30 ஆக நீட்டிப்பு

பான் மற்றும் நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு – ஜூன் 30 ஆக நீட்டிப்பு

 

Aadhaar linking deadline extended for PAN and Welfare Schemes

 

இந்தியாவில் உள்ள பல்வேறு சேவைகளுக்கு இன்றையளவில் ஆதார் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேவைக்குமான ஆதார் இணைப்பு நடைமுறையில் காலதாமதம் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமையால் காலக்கெடு நீட்டிப்பு என்பது தற்சமயத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

பணமதிப்பிழப்புக்கு(Demonetisation) பிறகு அரசு பல்வேறு கட்டங்களாக ஆதார் இணைப்பு நடவடிக்கையை முடுக்கி விடப்பட்டுள்ளது. இருப்பினும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வங்கிக்கணக்குகள் மற்றும் கைபேசி எண்களுக்கான(Bank accounts and Mobile numbers) ஆதார் இணைப்பு காலக்கெடுவை காலவரையற்றதாக அறிவித்தது. இதை போல நேற்றும் அரசு சார்பில் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி பின்வரும் விஷயங்களுக்காக தெரிவிக்கப்பட்டது.

 

நாட்டில் உள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு கடைசி தேதியாக வரும் ஜூன் 30 (June 30,2018) ஆக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 150 நலத்திட்டங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம், ரேஷன், மதிய உணவு உட்பட்ட நலத்திட்டங்களும்(Pension scheme,MGNREGA, PDS) இவற்றில் அடங்கும். இதற்கு முன் நலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு காலக்கெடு மார்ச் 31 ஆக இருந்தது குறிப்படத்தக்கது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

இதனை போல, நேரடி வரிக்கான மத்திய ஆணையமும்(Central Board of Direct Taxes – CBDT) பான் – ஆதார் இணைப்பிற்கான (PAN – Aadhaar linking) காலக்கெடுவாக ஜூன் 30 ம் தேதியை அறிவித்தது. பான் (PAN) சம்மந்தமான இணைப்பில் அரசு ஏற்கனவே 4 முறை நீட்டித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

இந்த ஆணையத்தின் புள்ளிவிவரங்களின் படி, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள 33 கோடி பான் கணக்கில், 16 கோடி பான் எண்களுக்கு ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் பான் எண்ணிற்கான ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற நடைமுறை ஜூலை 31, 2017 ம் தேதி முதலும், புதிய பானுக்கான (New PAN) ஆதார் சமர்ப்பிப்பு ஜூலை 1, 2017 முதலும் அமல்படுத்தப்பட்டது.

 

ஆதார் இணைப்பில் உச்ச நீதிமன்றத்தின் நெருக்கடி மற்றும் சமீப காலங்களில் ஆதார் குறித்த பாதுகாப்பின்மை போன்ற தகவல்களால், மேலே உள்ள இரு சேவைகளுக்கு அரசு சார்பில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com