Airtel Logo

ப்ரீபெய்ட் கட்டணத்தை அதிகப்படுத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் – நாளை முதல் அமல்

ப்ரீபெய்ட் கட்டணத்தை அதிகப்படுத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  – நாளை முதல் அமல்

Increased Prepaid Tariffs – Airtel, Vodafone Idea and JIO

இந்திய தொலைத்தொடர்பு துறையில் கடந்த சில காலங்களாக பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. பல நிறுவனங்கள் இந்த துறையில் காணாமல் போய் விட்டன. பொதுத்துறையான பி.எஸ்.என்.எல். நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. இணைய வழி தகவல் பரிமாற்றம் வந்த பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

கடந்த சில வருடங்களாக அழைப்புகளிலும், இணைய பயன்பாட்டுக்கும் பல சலுகைகளை அளித்து வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது கடனில் தத்தளித்து வருகின்றன. பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனத்தின் கடன் ரூ. 1,28,530 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் கடைசி இரு காலாண்டுகளில் நஷ்டத்தை மட்டுமே கொண்டுள்ளன.

இது போல வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனத்தின் கடன் 99,660 கோடி ரூபாய். நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் 50,920 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ(JIO) நிறுவனம் குறிப்பிடத்தக்க சந்தாதாரர்களை கைப்பற்றியிருந்தாலும், தனது கடன் தன்மையை குறைக்கும் பொருட்டு சந்தாதாரர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த தயாராக உள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் பெரும் விவாதத்தில் இருந்தது. ஒரு சூழ்நிலையில் வோடபோன் நிறுவனம் தன்னை திவால் நிலைக்கு அறிவிப்பதற்கு தயாராகவும் இருந்தது. இது சார்ந்து மத்திய அரசிடமும் கோரிக்கையை வைத்திருந்தது. இந்நிலையில் நாளை(03-12-2019) முதல் வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை(Tariff) உயர்த்தும் நோக்கில் நிறுவனங்கள் சென்றுள்ளன.

சந்தாதாரர்களின் ப்ரீபெய்ட் கட்டணம் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்க கூடும் என சொல்லப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் முன்னர் இருந்த 129 ரூபாய் திட்டம், தற்போது 148 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான 28 நாட்கள் காலவரையில் மாற்றமில்லை. இது போல 249 ரூபாயாக இருந்த திட்டம் 298 ரூபாயாகவும், 499 ரூபாய் திட்டம் 698 ரூபாயாகவும், 199 ரூபாய் திட்டம் 248 ரூபாயாகவும் மாற்றப்பட உள்ளது.

வோடபோன் ஐடியாவில் குறைந்தபட்ச திட்டமான 35 ரூபாய் பேக்(Pack), இனி 49 ரூபாயாக மாற உள்ளது. இது போல 199 ரூபாய் திட்டம் 249 ரூபாயாகவும், ரூ. 459 திட்டம் இனி 599 ரூபாயாகவும் அதிகரிக்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவும் தனது சந்தாதாரர்களின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளது. இருப்பினும், அதற்கான விலை பட்டியலை வெளியிட வில்லை.

வரும் நாட்களில் இலவச அழைப்புகளின்(Voice Calls) எண்ணிக்கை குறைய கூடும். அதே வேளையில் இணைய வழி பரிமாற்றத்திற்கான(Data) சேவை கட்டணம் அதிகரிக்கலாம். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டை மறு ஆய்வு செய்வதற்கான காலம் வந்து விட்டது எனலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.