பி.எப். தொகைக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக அறிவிப்பு
The EPF Interest rate to 8.65 Percent for 2018-19
2018-19ம் நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(EPF) வட்டி விகிதம் 8.65 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சார்ந்து அறிவிக்கப்பட்ட தகவலில் கடந்த 2017-18ம் ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55 சதவீதம் இருந்ததாகவும், தற்போது 2018-19ம் வருடத்திற்கு 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 8.65 சதவீதமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சொல்லப்பட்ட 8.65 சதவீத வட்டி ஒரு சில நாட்களில் பி.எப். சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என இ.பி.எப். அமைப்பு(EPFO) கூறியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள ஆறு கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதம் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின், சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும். அடுத்து வரவிருக்கும் வாரங்களில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை பாரத ரிசர்வ் வங்கி குறைக்கும் பட்சத்தில், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் ஏற்படலாம்.
அஞ்சலக மற்றும் வங்கி சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைவான நிலையில் இருப்பினும், மேலும் இதன் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சார்ந்த தகவல் நடப்பு செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அறிவிக்கப்படலாம்.
இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
வங்கி வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி(Public Provident Fund) மற்றும் வரி சேமிப்பு சார்ந்த சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம். இந்த வட்டி விகித மாற்றம் அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக்கு உட்பட்டதாக இருக்கும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் கடந்த 2010-11ம் நிதியாண்டில் 9.50 சதவீதமாகவும், 2014-15ம் நிதியாண்டில் 8.75 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிறு சேமிப்புக்கான வட்டி விகித மாற்றங்கள் பணவீக்க விகிதத்தை(Inflation Rate) சார்ந்து இருக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை