Tag Archives: stock market crash

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் ராஜினாமா – பங்குச்சந்தை வீழ்ச்சிக்கான மற்றொரு செய்தி

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் ராஜினாமா – பங்குச்சந்தை வீழ்ச்சிக்கான மற்றொரு செய்தி

US Defence Secretary James Mattis resigns – News for the Stock Market Crash

 

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட பல அளவுகோல்கள் இருந்தாலும், இவையனைத்தும் ஒரே இடத்தில் அமைய பெற்றது அந்த நாட்டினுடைய பங்குச்சந்தை தான். வெறும் முதலீட்டுக்கான மற்றும் பணம் பண்ணுவதற்கான சந்தையாக மட்டுமில்லாமல், ஒரு நாட்டின் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தை சார்ந்து தான் பங்குச்சந்தை இயங்கி கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

வெள்ளிக்கிழமை அன்று (21-12-2018) வெளிவந்த அமெரிக்க செய்தி ஒன்று, உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தின. சிரிய நாட்டிலிருந்து தனது நாட்டு ராணுவ படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்த செய்தி, மற்ற நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியின் போது, சிரியா நாட்டில் ஆக்கிரமித்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை களைய அமெரிக்க படைகள் களமிறக்கப்பட்டன.

 

ஐ.எஸ்.ஐ.எஸ். க்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க படைகள் வெற்றி பெற்றதாகவும், இனி மேல் அங்கு படைகள் இருப்பதற்கான வேலையெதுவும் இல்லையென்றும் அதிபர் டிரம்ப் செய்தி வெளியிட்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளை அமெரிக்க அரசு திரும்ப பெற்று கொள்ளும் (Getting out of Syria). ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் எதிரிகள் ஈரான், ரஷ்யா மற்றும் சிரியா மட்டுமே ‘ என்றார்.

 

இந்த செய்தியை தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் ராஜினாமா செய்த விஷயமும் அமெரிக்காவில் சூடான விவாதமாக அமைந்தது. அதிபர் (President Trump) ட்ரம்பின் படைகளை திரும்ப பெறுவதற்கான முடிவில் தனக்கு திருப்தி இல்லை என பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் (James Mattis), தனது  பதவியிலிருந்து விலகி கொண்டார். இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் எல்லைச்சுவர் (அமெரிக்க-மெக்ஸிகோ – Mexico Wall) கட்டுவதற்கான நிதி கோரிக்கையை வலியுறுத்தியதால் மத்திய அரசாங்கத்தை மூடுவதற்கான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்காவில் நடந்த இந்த செய்திகள் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற விஷயம் பங்குச்சந்தைக்கு பாதகமான செய்தியாக அமைந்தது. பொதுவாக நமது நாட்டில் தான் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு பங்குச்சந்தை செவி சாய்க்கும். அமெரிக்க நாட்டில் அவ்வாறு நடைபெறுவது கிடையாது.  ஆனால் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் விஷயத்தில் ஒவ்வொரு செய்தியும் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 

முன்னர் வட கொரிய அணு சார்ந்த பிரச்சனை, அமெரிக்க-சீன வர்த்தக போர், விசா விவாகரம், ஈரானுடன் கச்சா எண்ணெய் பிரச்சனை போன்றவை நடப்பு அமெரிக்க அரசில் பேசப்பட்ட செய்திகளாகும். வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச்சந்தை (Indian Stock Market) வெகுவான இறக்கத்தை அடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி (Nifty 50) சுமார் 200  புள்ளிகள் என்ற அளவிலும், மும்பை சந்தை கிட்டத்தட்ட 700 புள்ளிகள் சரிவிலும் முடிவடைந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மிகப்பெரிய நிறுவனங்கள், மிகப்பெரிய வீழ்ச்சி – இந்திய பங்குச்சந்தை வரலாறு

மிகப்பெரிய நிறுவனங்கள், மிகப்பெரிய வீழ்ச்சி – இந்திய பங்குச்சந்தை வரலாறு

Top Stocks and Big Crash in a Single day – Indian Stock Market

கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் வெள்ளிக்கிழமை அன்று (21-09-2018) இந்திய பங்குச்சந்தையை ஒரு ஆட்டம் காண வைத்தது திவான் ஹவுசிங் (DHFL -Dewan Housing Finance Corporation Ltd) பங்கின் வீழ்ச்சி. ஐ.எல்.எப்.எஸ் (IL & FS) குழுமத்தின் கடன் பிரச்சனை மற்றும் DHFL நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் திடீர் விற்பனை பங்குச்சந்தையை வெகுவாக பாதித்தன.

 

அதன் தொடர்ச்சியாக திவான் ஹவுசிங் பங்குகள் ஒரே நாளில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து வர்த்தகத்தின் முடிவில் (-42.5 %) நிலை பெற்றது. இதன் தாக்கம் எஸ் வங்கியிலும் (Yes Bank) தெரிந்தது. திவான் ஹவுசிங் நிறுவன பங்கின் ஒரு நாள் வீழ்ச்சி மும்பை பங்குச்சந்தையை 1000 புள்ளிகளுக்கும் மேலாக இறக்கம் காண வைத்தது.

 

நாட்டில் வங்கிகளின் வாராக்கடன் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFC) செயல்பாடும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு பங்கினுடைய வீழ்ச்சி (DHFL) என்பது இந்திய பங்குச்சந்தையில் ஒன்றும் புதிதல்ல, எனினும் வரும் நாளில் சந்தை மீட்கப்பட்டாலும், வீழ்ச்சியடைந்த நிறுவனத்தின் பங்கு பெரும்பாலும் எழுச்சி காண்பதில்லை.

 

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் வீழ்ச்சியடைந்த பங்குகளின் பட்டியலில் திவான் ஹவுசிங் இடம் பெற்றிருந்தாலும், மிகப்பெரிய வீழ்ச்சியடைந்த நிறுவனம் என காணும் போது, சத்யம் நிறுவனம் (Satyam Computers) தான் முதலிடத்தில் உள்ளது. இது ஒரு மிகப்பெரிய நிறுவனமாகவும் இருந்தது கூட. அதன் நிறுவனர் திரு. ராமலிங்க ராஜு செய்த குற்றத்தால், சத்யம் நிறுவன பங்கு ஒரே நாளில் 77 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அதாவது சந்தை விலை ரூ. 143 /- கொண்ட சத்யம் பங்கு, ஒரே நாளில் 77 % வீழ்ச்சி அடைந்து வர்த்தகத்தின் முடிவில் 32 ரூபாயில் முடிவடைந்தது (ஜனவரி 2009).

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சத்யம் நிறுவனத்தை தொடர்ந்து 2013 ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில், பைனான்சியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் (Financial Technologies) பங்கு ஒரே நாளில் 64 சதவீதம் வீழ்ந்தது. 388 ரூபாய் விலை இருந்த பங்கு, வர்த்தக முடிவில் 153 ரூபாயாக நிலை கொண்டது. ஸ்பாட் மார்க்கெட்டில் நிகழ்ந்த முறைகேட்டால் பைனான்சியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் 80 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி கண்டது. இதன் மூலம் தனது சந்தை மூலதனத்தில் சுமார் 3500 கோடி ரூபாயை இழந்தது.

 

இதனை அடுத்து மூன்றாவது மிகப்பெரிய வீழ்ச்சி கண்ட நிறுவனம் கோர் எஜுகேஷன் (Core Education). நிறுவனர்கள் தங்களது பங்குகளை அடமானம் வைத்ததை விற்று விட்டதாக வந்த செய்தி (பிப்ரவரி 2013), இந்த பங்கின் விலையை ஒரே நாளில் 62 சதவீதம் வீழ்ச்சி அடைய வைத்தது. 286 ரூபாய் இருந்த பங்கு, வர்த்தகத்தின் முடிவில் 110 ரூபாயாக முடிவடைந்தது.

 

தொடர்ச்சியாக மூன்று நாள் இறக்கத்திற்கு பின் அந்த பங்கின் விலை 81 % வீழ்ச்சி அடைந்து 56 ரூபாயில் நிலை கண்டது. இதனை போல யூனிடெக் (Unitech), ஜி.டி.எல் (GTL), பூர்வா (Purva), அக்ருதி (Akruti), இன்.பி.பீம். அவென்யூ (Infibeam – Updated on 28th September,2018) போன்ற நிறுவனங்களின் பங்குகளும் வெவ்வேறு காலத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது. தற்போது திவான் ஹவுசிங் நிறுவன பங்கின் வீழ்ச்சி, அதன் சந்தை மூலதனத்தில் சுமார் 8000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் சந்தையில் பெரிய வீழ்ச்சி கண்ட நிறுவனங்களில் சில இன்னும் அந்த பங்கின் விலையில் மீளவில்லை. மற்ற சில நிறுவனங்களோ பங்குச்சந்தையிலே அடையாளம் காணப்படவில்லை.

 

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வெறும் பங்குகள் என பார்க்காமல், அந்த நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வுகள் (Fundamental Analysis) மற்றும் தொழில் முறையையும் கவனித்து பின்பு வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

 

பங்குச்சந்தை கடலில் யாரும் நீந்தலாம், ஆனால் எதிர்நீச்சல் போட முயற்சிக்க வேண்டாம்.

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com